ஒரு துளி மலையில்; ஒன்றோ கோபுரத்தில்! மற்றொன்று குளத்தில். பிறிதோ கடலில்! ஒன்று பசும்வயலில். மற்றது தரிசில். ஒன்று கூரையில். பல மைதானத்தில்! ஆயினும் ஒன்று அவன் மேனியில் பட "ஆ! முதல் மழைத்துளி!" என்று மகிழ்கிறான் பல் தெரிய! ஆயினும் அது சரியே! அவனுக்கோ அதுவே முதலாக இருந்தது. பல நாட்கள் கழிந்ததும் அத்தகைய நாளொன்றில் அவன் முடிவும் நிகழலாம்! பிறகும் மழை பொழியலாம். இன்னொருவன் வந்திடலாம்! அசையாதிருக்கும் மலையோ எப்போதும் அசையும் கடலோ எத்தனை மழை கண்டிருக்கும்? அறிந்தால் நன்றாய் இருக்கும்!
Thanks Vaidehi, for your appreciation and for the links that you sent. Heard the first two and found them good. It takes sometime to get adjusted to hearing western melodies But the theme and the words were good. -rgs