கடல் போல உலகினிலே மதி மயங்கும் அழகினிலே விதவிதமாய் மனிதர்களை காணுகிறேன் தினந்தினமும் வியக்க வைக்கும் நல்லவரை காணவில்லை அணுவளவும் !! தன்னலம் ஒரு பக்கம் தலைகனம் மறுப்பக்கம் முகமெதிரே சிரிகின்றான் முதுகெதிரே பழிகின்றான் வகைவகையாய் நடிக்கின்றான் பகைத்தீர்க்க நினைக்கின்றான்!! பணம் தேடி தினம் ஓடி களைத்திடும் மனமே , உண்மைகள் புரிந்துக்கொள் !! நட்புடன் இருந்திடும் குணமே நிலைத்திடும் செல்வம் , அறிந்துக்கொள் !! நல்லவனாய் நீ இருந்தால் நன்றியோடு வாழ்ந்திருந்தால் துன்பத்திலும் சிரித்திடுவாய் துவளாமல் நின்றிடுவாய் வானவில்லின் வண்ணங்களாய் வாலி கொண்ட எண்ணங்களாய் வாழ்ந்திட துடிக்கும் மனிதர்களில் விதங்கள் தான் எத்தனையோ ? பால் நிலவை சூழ்ந்திருக்கும் விண்மீன்கள் அத்தனையோ!!! --- நிரஞ்சன்