பல வருடப் பழக்கம் அது கூட, ஒரு சொல்லில் உடைந்தே போகும். ஆம்! எவ்வுறவாயினும் அது வாழ ஒரு எச்சரிக்கை உணர்வும் வேண்டும். சிந்திய பொருள் அல்ல நம் சொற்கள்! சொன்னது என்றைக்கும் நின்றிடுமே! உடைந்த கண்ணாடியை ஒட்டிடினும் அதன் தடம் மறையாமல் தங்கிடுமே! நமை நாம் மதிப்பதைப் போலே தான் பிறரையும் நாம் மதித்திட வேண்டும். ஆம்! நமைப் பிறர் சிறுமை செய்திடத் தான் நாம் பொங்கிடுவோம்! நினைவில் கொள்வோம்! செல்வத்தில், திறத்தில், பிற மற்றவற்றுள் மிஞ்சியதாய் பிறரைத் தாழ்த்துவதில் ஒன்றும் கிட்டாது, அவர் இருளில் மூழ்கிடுவார்; விரைவில் தாழ்ந்திடுவார். எத்தனை சிறப்புகள் நாம் கொண்டாலும், நமை மிஞ்சியவர் என்றும் இருப்பாரே! அத்தனையும் தேர்பவர் அதனோடும் அணிகலனாய் அடக்கம் கொள்வாரே!
Good one.Yes.We need to be careful in what we talk. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று சிந்திய பொருள் அல்ல நம் சொற்கள்! சொன்னது என்றைக்கும் நின்றிடுமே! உடைந்த கண்ணாடியை ஒட்டிடினும் அதன் தடம் மறையாமல் தங்கிடுமே!...... True and lovely lines.