உண்ண உணவெடுத்தேன் உணவில் உன் முகம்; அருந்த நீர் எடுத்தேன் நீரில் உன் முகம்; உறங்க பாய் விரித்தேன் பாயில் உன் முகம்; விழிகளை மூடி உன் நினைவை துரத்த முயன்றேன் மூடிய இருவிழிகளுக்குள் பிரம்மாண்டமாய் உன் பிம்பம்!! விழிகளை திறந்தேன் காணுமிடமெல்லாம் பார்க்கும் பொருளெல்லாம் உன் உருவம்!! நெஞ்சுக்குள் இருந்து நிம்மதியை கெடுக்கின்றாய் உயிருக்குள் இருந்து என் உயிரை பறிக்கின்றாய் மறக்க முயன்றும் தோல்வி தான் தருகின்றாய் சுகம் தான் பல நேரங்களில் சுமையோ சில நேரங்களில்!
அங்கிங்கு என முடியாத, ஆனந்த ஜோதியாய் ஆனந்தியின் மனதில் ஐக்கியமான அந்த மனிதர் மீது சற்று பொறாமை :rant எப்போதும் போலவே அழகு கவிதை ஏ.ஜி.
எங்கும் நிறைந்தவர் உன் நெஞ்சம் நிறைக்க அன்பை இறைக்க ஏறுபோல் உழுதிட விளைந்த அன்பில் ஏற்றம் உங்கள் இருவர் வாழ்விலும்....
Super KGP :thumbsup உன்னை மறக்கத்தான் நினைக்கிறேன் அதை நான் மறந்தும்விட்டேன்.. உன்னை நினைக்கவே மறுக்கின்றேன் மறுத்ததை நான் வெறுத்தும் விட்டேன்..