பாளம் பாளமாக வெடித்து கிடந்த நிலத்தை வெட்டி சீராக்கி விளை நிலமாக மாற்றி விதைத்து பயிர் வளர்த்து அறுவடை செய்து விளைந்ததை காசாக்கி பிள்ளைக்கு அனுப்ப பிள்ளை காசை கரியாக்கி சொர்க்கத்தில் மிதந்தான் போலி சொர்க்கத்தில் மிதந்தான் தந்தையின் கரங்கள் காய்த்து கிடந்தன உழைப்பால் மகனின் உதடும் வறண்டு கிடந்தது புகை பிடித்ததால் உழைப்பால் பாலையை சோலையாக்கினார் தந்தை உழைக்க மறந்து வாழ்க்கையை பாலையாக்கினான் மகன்
மலைக்கும் அளவிற்கு தந்தையின் உழைப்பு உழைப்பினார் வந்த ஊதியத்தில் உல்லாசமாய் மயங்கி உறங்கி கிடப்பதே மகனின் இழி பிழைப்பு விழலுக்கு இறைத்த நீராகுதே பாடுபடும் இவ் உழைப்பு
தந்தையின் துயர் தீர்க்க வேண்டிய புதல்வர்கள் பலர் மாயையில் உழன்று கிடக்கிறார்களே என்ற வருத்தம் எனக்கு உண்டு
உழைத்துப் பிழைக்கும் தந்தையை மதிக்காமல், உழைப்பைப் பழிக்கும் தறுதலைப் பிள்ளைகள் பற்றிய வலியும், வேதனையும் வெளிப்படுத்தும் உங்கள் கவிதை நன்று, பெரியம்மா !
தந்தையின் தோளில் சவாரி செய்பவர்க்கு அவரின் உழைப்பின் வலி அவர் தந்தையாகும் போது தெரியும். தந்தையின் வலி சொல்லும் கவிதை நன்று
உழைப்பால் பாலையை சோலையாக்கினார் தந்தை உழைக்க மறந்து வாழ்க்கையை பாலையாக்கினான் மகன் பெற்றோரின் உழைப்பையும் ,வேதனையை சொல்லும் அழகு கவிதை. அவர்கள் தந்தை ஆகும் போது தன் தந்தையின் அருமை புரியும்.