அன்பு பால் கொண்டு ஆசையை நெய்யாக்கி இனிமை வெல்லம் (வார்த்தைகள்) சேர்த்து ஈர்க்கும் (உன் பால் ) கதிரின் வெப்பத்தில் உள்ளப் பானையில் ஊற்றெடுத்து பொங்கும் பொங்கலை என்றென்றும் வைக்கிறேன் ஏற்காது போவாரோ என்ற ஐயம் சற்றும் இல்லாதே ஒன்றாய் மகிழ்ந்து உண்டு ஓய்வும் கொண்டு களிப்போடு வாழ்கிறேன் கற்பனையில்! அகர வரிசையில் எழுத முயன்றேன்...
அகரப்பொங்கல் சிகரம் போல் உள்ளது. ஏற்காமல் போக முடியுமா ? கற்பனைக் களிப்பு- கற்கண்டு இனிப்பு . மனதிலே என்றென்றும் இன்பம் பொங்கட்டும் ! வானவில் வண்ணங்கள் வாழ்விலே தங்கட்டும் ! பொங்கல் வாழ்த்துகள் ,லக்ஷ்மி !
மிக்க நன்றி @vidhyalakshmid @iyerviji @Amica @kaniths @PavithraS @subrabidha @Counseling @periamma @GoogleGlass