உயிருக்கும் கூட உணர வைத்தாய்! நீ தான் என் வாழ்வின் சுவாசம் என்று! காதலே! என் உயிர் தொட்ட மலரா நீ? மனம் தொட்டு வருடிய உன் மென்மை தந்த சுகம்! இதுவரை உணர்ந்ததில்லை யாரிடமும்! காதல் வரிகள் கூட இதயம் உருக்கியது! நீ தந்த இந்த மாற்றங்கள் விருப்பமே! விளையாடும் பருவமில்லை இது! இருந்தும் உன்னுடன் மட்டுமே விளையாட விரும்பும் மனது! விளையாடி நீ தோற்க! வென்ற என் மனமும் சோர்ந்திடுமே! என் அன்பே உன் முகம் வாட! வரிகளாய் காதல் இன்று வெளிபட்டலும்! வெளியிட முடியுமோ என் காதல் முழுமையும்?? தோற்று போகுமே என் அன்பை கொட்ட முடியாமல் தமிழ் மொழியும்! இந்த ஒரு யுகம் போதாதடா! என் காதல் சொல்ல! நாழிகைகள் கூட பொறாமை படுவதாய்! என்னை காட்டிலும் அவனுக்கான உன் அன்பு நீண்டவாறே என்று! அதற்கு எப்படி கூறுவேன்?? எத்தனை பிறவி நீ பெற்றாலும் முடியாது உன்னால்! என் அன்பை வெல்ல என்று!
அருமையாய், அழகாய், அற்புதமாய்.. வெளிப்பட்டது உன் உயிரிலே கலந்த நேசம், உன் சுவாசமாய் வாசம் செய்யும் உன் நேசம்.. உன் வரிகளிலே
நன்றி ரம்யா! காதலே அழகு தான்! தாய்மைக்கு அடுத்து ஒரு குழந்தையாய் உன் துணையின் நலம் நாடும் ஒரே உறவு!:thumbsup
நம்மை உணர்ந்தெழ செய்வதே காதல் உணர்வு தான்! அது ஆட்களை பொறுத்தே வேறுபடும்! மற்றவரிடம் கொண்டால் அன்பாய் மட்டுமே! உற்ற துணையுடன் கொண்டால் காதலாகவும்! அந்த உணர்வே சுகம் தான்! காதலில் கரைவதும் ஒரு சுகம்!:thumbsup
unathu kaathalin aazhathai unathu intha kavithai unarthiyathu yamini.... un uyirin suvaasam intha kavithayil kalanthu suganthathai kodukkirathu.... arumai arumai... endrum intha suganthamaana suvaasam unnai thaluvattum .....