* உலகின் உயர் இன்பங்கள் எத்தனை எத்தனையோ அத்தனைக்கும் சொந்தக்காரி நீயாக இருக்க சோகங்களும் உனை சேர்ந்துகொள்ள கொள்ளை ஆசையில் .... உனை சூழ்ந்திட்ட சோகங்களில் சிலவற்றை சுருட்டி வைத்துள்ளேன் என் பங்கிற்கு .... அதன் முன் ஒப்பிடுகையில் உன் சாபம் , ஐயோ பாவம் !! வெறும் வாய்க்கொண்டு சபித்தால் தான் சாபம் என்று யவர் சொன்னது ??? நின் இனிமையின் நினைவுகள் ஒன்றோடு ஒன்று கலந்து புணர்ந்து கருவாகி உருவாகும் ஒவ்வொரு சோக கிள்ளையும் எனக்கு சாபம் தான் .....