தன்னிலை மறந்து அன்று உன்னிலே தொலைந்தேனடி!! தேடிட மனமின்றி அன்று தெரிந்தே தொலைத்தேனடி!! நாடி வருவாய் என்று நம்பியே இருந்தேனடி!! ஏற்றுக் கொள்வாய் என்று எண்ணியே வாழ்ந்தேனடி!! மறந்துவிடு என்னை என்று சொல்லிச் சென்றாயடி!! மறந்திட முடியாமல் அன்றே மண்ணிலே புதைந்தேனடி!! ஊணிருந்தும் உயிரற்றவனாய் என்றோ நடைபிணம் ஆனேனடி!! வெறுதிடத் தோணாமல் இன்று நெருப்பிலே வெந்தேனடி!!
Hai Malarma, Nice poem. loved the below lines. நாடி வருவாய் என்று நம்பியே இருந்தேனடி!! ஏற்றுக் கொள்வாய் என்று எண்ணியே வாழ்ந்தேனடி!!
ஏனடி? ஏனடி? இந்த ஏக்கமும் ஏனடி?? மனம் விட்டுச் சொன்னாலே சொன்னாலே தொலைந்த இடத்திலே துளிர் விடும் தன்னாலே..... மலர்..அழகான,ஆழமான வரிகள். நன்றி
தோற்ற காதலன் மண்ணுள்ளே புதைந்த பின்னும், நெருப்பிலே வெந்த பின்னும் சூப்பரா ஆவியா எழுந்து, உன்னாலே உன்னாலே ன்னு அமர்களப் படுத்திட்டார் மலர். அய்யய்யோ நா இல்லப்பா - என்ன ஆள விடுங்க... மலர் இந்தப் பாவிய ஆவியா ஆக்கறதுக்கு முன்னாடி... :hide: