புலவர்களில் இரண்டு வகை பாட்டு பாடி பரிசு பெறுபவரும் உண்டு , குற்றம் கண்டுபிடித்தே வாழ்பவரும் உண்டு , இது தருமியின் வசனம் ...... இதில் இரண்டாம் வகை நான் என்பிரோ ! பதில் சொல்லும் நட்பினரே!
திருவிளையாடல் அரங்கேறிய மதுரையில் இருந்து தீபா வருவதால், கண்டிப்பாக குறை கண்டுபிடிப்பதில் வல்லவர். ஆனால் மிகவும் நல்லவர். :thumbsup யாரையுமே பகைச்சுக்க கூடாது - எப்பவேணா உதவி தேவப் படும். :rotfl
சொல்லாமல் சொநீரோ இரண்டாம் வகை தான் என்று! பகை வேண்டாம் என்பதால் பதில் இலைமறை காய்! புலவர்களுக்குள் இதெல்லாம் சகஜம் ,கவலை வேண்டாம்! சங்கீத கச்சேரியில் சுப்புடு இருப்பர், கவிதை கச்சேரியில் நக்கீரர் இருப்பர்
சுப்புடுவையும் , நக்கீரனையும் இங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சங்கீதம் இருக்கும் இடத்தில்தான் சுப்புடுவிற்கு மகிழ்ச்சி நக்கீரன் இருக்கும் இடத்தில்தான் சிவபெருமானுக்கு மகிழ்ச்சி என் இனிய நண்பர்கள் இருக்கும் இடத்தில்தான் எனக்கு மகிழ்ச்சி நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பு வணக்கங்கள்
மறந்தது நான் அல்ல நண்பரே தினமும் வருவேன் ஆனால் பதில் குடுக்க முடியவில்லை "அவள் எங்கே ?" என்று ஒருநாளும் கேட்கவில்லை நீங்கள்........... இப்பொழுது சொல்லும் யார் மறந்ததென்று ?
மீரா, நான் கேட்கவில்லை என்பது உண்மை தான். காரணம் நீங்கள் லீவு சொல்லிவிட்டுத் தான் விடுப்பில் சென்றீர்கள். கேட்காததற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இனி ரெகுலரா வருவீர்கள் அல்லவா?