ஏதோ ஒரு அறையில் நானும் இங்கே இருக்க, என் காதலை நமது அறையும் உனக்கு உணர்த்திடுமோ... காலை கண் விழித்தால் முதல் கடவுளை நான் நினைக்க பின் உன்னை நானும் அணைக்க அது விடிந்திடுமோ... நீ எழுந்து வரும் நிமிடம் உன்னை அணைத்திடுவேன் நித்தமும்.. நான் அறையில் இல்லாவிடிலும் வந்து உன்னை அடைவேன் பொழுதும்.. நாளிதழ்கள் நீ படிக்கும் நேரத்திலே, நானும் உன்னை ரகசியமாய் படித்திடுவேன்... குழம்பியை சுவைத்து நீயும் பருகிடவே, உன் இதழ்களை நானும் சுவைத்து பருகிடுவேன்... உன்னை நீ அறியாமலே பறித்தேனே நானும் அன்று... நானும் நீ தானே என்று முழுதாக கொண்டேன் இன்று... என்றும் உன் நினைவில் என் நொடிகள்... எனதருகே நீயும் இருந்தும் யார் யாராரோ போலே இருந்தோம்.. பொய் கோவம் என்று தெரிந்தும் வாய் பேசாமலே கடந்தோம்... நீ பேசும் வார்த்தைகளின் நடுவினிலே நான் கேட்க்கும் காதல் சத்தம் பெருகிடுமே... உன் தீண்டல் ஸ்பரிசங்களின் உணர்வினிலே என்னுள்ளே ஹார்மோன் யுத்தம் தொடங்கிடுமே... காற்று புகா இடைவெளியை நம் நெருக்கங்களில் நாமும் கண்டோம்... காலத்தினால் அழியா என்றும் நிலைத்து நிற்கும் காதல் கொண்டோம்.. என்றும் உன் வழியில் என் விழிகள்.... இப்பிரிவு தரும் வலிகள், மெல்ல நகர்ந்து செல்லும் யுகங்கள்... உன் கைகள் கோர்க்கும் நொடிகள் அவை தெய்வம் தந்த வரங்கள்...
If only Rehman sir compose music for this heart wrenching lyrics mixing western and carnatic raga and a bit of copy of composition from Beethoven, this can turn into a instant rage among youths and cine buffs. A twitter to Rehman Sir might get the needful done for tamil audience. I might be wrong too, because I feel you are already in lyrics writing for tamil cinema industry as I find IN YOUR THIS & other LYRICS posted elsewhere the shades of THAMARAI. Thanks and Regards. God Bless.
Ha ha!! Thanks for the great compliment sir.. Always a fan of wonderful lyrics and maybe that's why you could find shades of Thamarai. This was written by keeping a random tune in my mind, so would seem like a song!! Yes!!