நீ எடுத்துப் போட்டவற்றை எல்லாம் அடுக்கிட நேரம் பிடிக்கிறது. நீ எழுந்ததும் மீண்டும் அவையெல்லாம் இறைபடும் என்பதும் புரிகிறது. இருந்தாலும் அது குறித்து நான் ஒருசிறிதும் கவலைப் பட்டதில்லை. நீ உறங்கியதும் அவற்றை எல்லாம் சீர் செய்திடச் சுணங்குவதும் இல்லை. நீ வருமுன்பே இப்பொருள் யாவும் சீராய் இருந்தன பல வருடம்! அவை எல்லாம் கலைத்திடவே நீயும் வாராயோ என்றே மிக ஏக்கம் கொண்டே வருந்தினோம் இருவருமே! அழுதோம், அவன் தாள் தொழுதோமே! நீ வரவும் காலம் தாழ்ந்திடவே அவனையும் நானும் சபித்தேனே! பின் ஒரு நாள் விடிந்தது எங்களுக்கும்! என் கால் தரை பாவாதிருந்தேனே! இன்றும் உன்னைக் காண்கையிலே அந்நாளை நினைத்தே மகிழ்ந்தேனே! காலை, நண்பகல், இரவு என மூவேளையும் இனிப்பே உண்பாரோ? நான் அப்படித் தான் உணர்ந்தேன் கண்ணே! அவனுக்கு நன்றியைச் சொன்னேனே!
Wow..superb song RGS..Its long time i read your songs and blogs.. Need some time to catch up all that i have missed.
Very nicely presented the emotions involved in a young couple who long for children and how they feel when they get one. Thank you for presenting it. Viswa
Very many thanks BhuvanaRam, DeviRams, Madhu Sharmila, Suryakala, Breeze, Viswamitra and Pushpavalli Srinivasan Madam for adding this post to your 'like's. -rgs