1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உடல் எடை குறைய எளிய குறிப்புகள்

Discussion in 'Posts in Regional Languages' started by ramyasrini8, Oct 6, 2010.

  1. pussy

    pussy Gold IL'ite

    Messages:
    4,186
    Likes Received:
    304
    Trophy Points:
    185
    Gender:
    Female
    Thanks a lot ramya.
     
  2. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    சைவத்திற்கு மாறுங்கள்

    டென்மார்க்: பெண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் பழம் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று டென்மார்க் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    பெண்கள் கருத்தரிப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை உண்டால் பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதற்காக அவர்கள் சில பெண்களை வைத்து ஆய்வு செய்ததில் பச்சைக் காய்கறி உண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    அதே சமயம் பொட்டாஷியம், சோடியம் அதிகமுள்ள வாழைப்பழம், உருளை அதிக அளவில் உண்டவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

    சரியான உணவு உட்கொண்டால் விரும்பும் குழந்தையை பெறலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் கருத்தரிக்கும் நேரத்தில் நடக்கும் பிற விஷயங்களைப் பற்றி அவர்களால் நிச்சயமாக கூறமுடியவில்லை.

    ஆராய்ச்சியாளர்கள் 172 தம்பதிகளை வைத்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு கருத்தரிக்கும் முன் 9 வாரத்திற்கு கால்சியம், மெக்னீஷியம் அதிகமுள்ள பழம், காய்கறிகள், மாத்திரை கொடுத்தனர். அவர்கள் கருவுற்ற பிறகு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

    இந்த ஆய்வில் இறுதி வரை கலந்து கொண்ட 32 தம்பதிகளில் 26 பெண்களுக்கு பெண்ணும், 6 பேருக்கு ஆண் குழந்தைகளும் பிறந்தன.

    ஆண் என்ன, பெண் என்ன, எல்லாம் ஒன்றுதான். எல்லாம் பத்து மாசம்தான், பெத்தா எல்லாருக்கும் ஒரே மாதிரியான பாசம்தான். இதைப் புரிந்து கொண்டாலே போதும். தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்கலாம்.
     
  3. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும்.

    2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும்.

    3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன.

    4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும்.

    5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    6. உப்பின் அளவையும் குறைக்கவும்.

    7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம்

    8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம்.

    9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும்.

    10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும்.

    11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது.

    12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும்.
     
  4. priya4prabhu

    priya4prabhu Silver IL'ite

    Messages:
    987
    Likes Received:
    67
    Trophy Points:
    83
    Gender:
    Female
    Very useful information
     
  5. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    உயர் இரத்த அழுத்தம் - எளிய குறிப்புகள்

    கரோலினா பல்கலைக் கழகத்தின் உடல் நலப்பிரிவு குறிப்பாக மன உளச்சலைத் தீர்ப்பதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டது.

    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு வால்நட் பருப்பும் வால்நட் எண்ணெயும் தரப்பட்டன. ஆறுமாதம் கழித்துப் பரிசோதித்தபோது இரத்த அழுத்தம் சீராக இருந்தது. மன உளைச்சலை ஏற்படுத்து வதில் முக்கிய காரணியாக விளங்குவது உயர் இரத்த அழுத்தம்.இத்துடன் அதிகப்படியான கொழுப்பு சேர்வதையும் வால்நட் கட்டுப்படுத்தி இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதனால் வால்நட் மன உளைச்சலை உறுதியாகக் குறைப்பதுடன் இதயநோய் பாதிப்பிலிருந்தும் விடுபட வைக்கிறது என்று கூறியுள்ளனர்.

    வால்நட்டில் நோய் எதிர்ப்புச் சக்தி, ஒமேகா-3 அமிலம், நார்ச்சத்து ஆகிய மூன்றும்தான் இரத்த அழுத்த த்தை உடனே குறைத்து மனக்கவலையை உடனடியாக மறக்கடிக்கிறது.

    பற்களைப் பாதுகாக்கும் தேநீர் எது?

    கறுப்புத் (பால் கலக்காத)தேநீரில் உள்ள பாலிபெனால்ஸ் என்ற கூட்டுப்பொருள் பற்களில் குழிவிழு வதையும் ஈறுகள் சிதைவதையும் தடுத்துப் பற்கள் ‘பளிச்’ என்று இருக்குமாறு பார்த்துக் கொள்வதாக சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகம் கண்டு பிடித்துள்ளது. மேலும் கறுப்புத் தேநீர் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரலையும் குறைக்கிறது. மேலும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு பற்களை பற்பசையால் சுத்தம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. வாயை நன்கு கொப்பளித்துவிட்டு தூங்கச் செல்லவும். இதே போல ஒவ்வொரு வேளை உணவு சாப்பிட்டதும் வாயை நன்கு அலம்பிக் கொப்பளிப்பதால் பற்களைச் சிதைத்துக் குழியாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை 30 சதவிகிதம் உடனே அழிக்கப்படுகிறதாம்.

    ஒரே உணவில் மூன்று நன்மைகள்!

    ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று நன்மைகள் உறுதியாக உண்டு.

    முதலில் இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

    100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

    இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

    இந்த லிக்னன்ஸ் இருப்பதால் ஆளிவிதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும், இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க்காரணிகள் எங்கே இருந்தாலும் லிக்னன்ஸ் அதைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. பரிசோதனைச் சாலையில், விலங்குகளுக்கு 7 வாரங்கள் தினமும் ஆளிவிதை கொடுத்ததில் 50% மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கி குணமாகியி ருந்ததை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

    மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

    மீனில் கிடைக்கும் அதே தரத்துடன் ஒமேகா-3 இந்த விதைகள் மூலம் எளிதில் கிடைப்பதால் நரம்பின் நுண்ணறைகள் மிகவும் பலம் பெறுகின்றன. இதனால் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு மன இறுக்கமோ அ ல்லது ஞாபக சக்தி குறைபாடோ வராது. மூளையின் ஞாபகசக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இந்த விதை முதலிடத்தில் இருக்கிறது.

    அதிக சக்தியும் அதிகக் கொழுப்பும் உள்ள இந்த அரிய உணவை, சுண்டலாகச் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம்.இதயத்திற்கும் மூளைக்கும் நன்மை தரும் கொழுப்புதான் இவை.அதிக சக்தியால் குறைவான உணவையே உண்போம். காராமணி, கொண் டைக்கடலை போல் அதிகப் பசியையும் இந்த ஆளி விதை கட்டுப்படுத்துகிறது. கடைகளில் ஃப்ளாக்ஸ் சீட், லின்சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனையாகிறது.
     
  6. manjubashini

    manjubashini IL Hall of Fame

    Messages:
    3,124
    Likes Received:
    2,858
    Trophy Points:
    310
    Gender:
    Female
    Re: உயர் இரத்த அழுத்தம் - எளிய குறிப்புகள்

    Very useful tips Ramya. i couldnt find out here in Muscat. I may say my mom to buy and send me. Pl say where it is available
     
  7. gbala1976

    gbala1976 New IL'ite

    Messages:
    5
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Male
    Thanks for your much useful informatin
     
  8. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    உடல் பருமன் குறைக்கும் - கொள்ளு சாதம்

    உடல் பருமன் குறைக்கும் சமையல் கொள்ளு சாதம்

    தேவையான பொருட்கள்

    வேகவைத்த கொள்ளு 1 கப்
    வேகவைத்த சாதம் 2 கப்
    எண்ணெய் 1 டீஸ்பூன்
    மிளகு 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை 1 கைப்பிடி
    சுக்கு பொடி 1 டீஸ்பூன்
    கடுக்காய் பொடி 1 டீஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    சின்ன வெங்காயம் 1 கப்

    செய்முறை:

    ஒரு கடாயில் எண்ணெய் காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும், பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப் பொடி, கடுக்காய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் வேகவைத்த சாதம் சேர்த்து, கிளறி ஒரு நிமிடம் மூடிவிடவும். சூடாகப் பறிமாறவும்.

    மனக்கட்டுப்பாடு பணத்திற்கு மட்டுமில்லாமல், ஒழுக்கத்திற்கு மட்டுமல்லாமல்... உணவுக்கும் சரிவிகிதத்தில் தேவை. பணத்தைச் செலவு செய்கிற மாதிரி உணவைச் சாப்பிட ஆரம்பித்தால்... நம் உடல் ஒரு கோயில்.... இல்லையென்றால் நம் உடல் ஒரு நோய் வாயில்!!
     
  9. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    Re: உடல் பருமன் குறைக்கும் - கொள்ளு சாதம்

    Hi everyone,

    Thanks for your support.

    Dear manjubashini,

    I hope you will get them in super markets.Ask your mother to check in the name of linseed.You could even see the photo of in google for reference.
     
  10. Priyarani

    Priyarani New IL'ite

    Messages:
    10
    Likes Received:
    1
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thank you very much of the useful tips for weight loss. Special thanks for the "kollu sadham" recipe.
     

Share This Page