"ஏல கணேசா !! அடுக்களைல பூனை உருட்டுற சத்தம் கேட்குபாரு ... போய்விரட்டுடா" - அப்பத்தா சத்தம் கேட்டு வேகமாக அடுக்களைக்கு ஓடினான் கணேசன். " அப்பத்தா பூனை குட்டிபோட எடம் தேடுது போலிருக்கு..... வயறு ரொம்ப பெரிசா இருக்கு" சனியன தொரவா விரட்டிபத்து... அக்காக்கு வெச்சிருந்த பாலை குடிச்சி தொலைக்கபோது...பாவம் நிறைமாசகாரி....ஒருவேளை பால்குடிகாட்டி சோர்ந்து போயிடுவா " - என்றாள்அப்பத்தா . யோசித்து கொண்டே கணேசன் அடுக்களையைவிட்டு வெளியே வந்தான். " என்னடா பூன ஓடிருச்சா " என்றாள் அப்பத்தா. " ஓடிருச்சு ஆத்தா " என்று பொய் கூறினான் கணேசன்.