1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

இளமை (ஆசிரியத்துறை)

Discussion in 'Regional Poetry' started by crvenkatesh, Sep 26, 2015.

  1. crvenkatesh

    crvenkatesh Gold IL'ite

    Messages:
    420
    Likes Received:
    522
    Trophy Points:
    173
    Gender:
    Male
    இளமை
    (ஆசிரியத்துறை)


    விழிகள் நீரை பொழிந்திடும் போதும்
    மனதுக்குள்ளே ஒரு தாகம்
    வலிகள் நிறைந்த வரிகளைப் பாடும்
    இதழ்களின் பின்னொரு சோகம்


    அதுவோர் காலம் நெஞ்சினில் ஆடும்
    அதுபோல் இனியும் வருமா
    மதிநிறை இரவில் மனதுக்குப் பிடித்தவள்
    மடிசுகம் தானினி வருமா


    மதுவினை உண்ட மயக்கத்தில் நாம்
    மயங்கியது எத்தனை இரவு?
    கதிர்களை சன்னலில் காணும் வரையில்
    தொடருமே நமது உறவு


    எதுவந் தாலும் எதிர்த்திடும் இளமைத்
    திமிரினைப் போலே வருமா
    முதுமையும் இளமை போலே இனிய
    நினைவுகளைத் தான் தருமா


    வீயார்
     
    1 person likes this.
    Loading...

Share This Page