ஒப்பிலா ஒருவன் ! தப்பிலாத் தலைவன் ! முப்பொழுதும் அவன் நினைவிலேத் தொழுது அப்பழுக்கின்றி நாம் வாழ்ந்து வந்தால், இப்பொழுதே அவன் ஆட்கொள வருவான் ! வார்பட மெதற்கு ? இவ்வைய முழுதும் சீர்பட அவனே நிறைந் திருக்கையிலே ? நேர்படவே நாம் வாழ்ந்து வந்தால், சேர்ந்திடலாம் அவன் திருவடி அதனில் ! சாத்திரங்கள் பற்பல உண்டு- அவன் தோத்திரமும் பற்பல உண்டு- மெய்ப் பாத்திரமாய் நாம் வாழ்ந்து வந்தால், காத்திருப்பான் நமைச் சேர்த்துக் கொள்ள ! சழக்குகள், சமயச் சண்டைகள் எதற்கு ? வழக்குகள், வாய்ப் பூசல்களெதற்கு? மன அழுக்கிலாது நாம் வாழ்ந்து வந்தால், கிழக்கிலுதிக்கும் கதிர் போலத் தெரிவான் ! அஞ்சுதல் வேண்டாம் ! ஆராய்ச்சி வேண்டாம் ! நெஞ்சில் கருணையை நிரப்பிக் கொண்டு சஞ்சலமின்றி நாம் வாழ்ந்து வந்தால், தஞ்சமும் தருவான், தன்னையும் தருவான் ! எங்குளானென்று அலைய வேண்டா- அவன் எங்குமுளான், எதிலு முளான் ! மாசறு தங்கமாய் நாம் வாழ்ந்து வந்தால், தங்குவான் நம் இதய கமலத்துள் ! Regards, Pavithra
அழகான கவிதை! சஞ்சலமின்றி இம்மையில் மெய்யோடு அன்பு கொண்டு வாழ்ந்திட்டால் அதுவே போதும் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள்
@jskls , @periamma , அன்பிற்குரியீர், உங்கள் சரியான புரிதலுக்கு நன்றி ! @vaish78 , @vaidehi71 கோட்பாட்டை விரும்பியமைக்கு நன்றி !