எப்படிதான் இந்த இரயிலுடன் சேர்ந்து மரங்களும் வேகமாக நகர்கின்றனவோ என வியந்த சிறுவயது பிராயத்தில் ஆரம்பித்தது இரயிலுடனான ஸ்னேகம்:cheers போட்டிப் போட்டுக்கொண்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வயல்வெளிகளையும் மலையையும் ரசிக்க ஆரம்பிக்கையில் தொடங்கியது இயற்கை மீதான காதல் சிறுவயது பயணம் ஒன்றில் பக்கத்து இருக்கை பயணி கொடுத்த நாவலை வரிவிடாமல் படித்ததில் போடப்பட்டது வாசிக்கும் பழக்கத்துக்கான விதை இப்படி பல வகையில் மனதுக்கு மிக நெருக்கமானதாய் இரயில் பயணம் இன்றும் கூட பயணிக்கையில் குழந்தை போல் கும்மாளமிடும் மனது....
HI prana...... சிறுவயது பயணம் ஒன்றில் பக்கத்து இருக்கை பயணி கொடுத்த நாவலை வரிவிடாமல் படித்ததில் போடப்பட்டது வாசிக்கும் பழக்கத்துக்கான விதை இப்படி நிறைய பேருக்கு வாசிக்கும் பழக்கம் பிரயாணத்தில் தொடங்கியது தான். அருமையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
தோழி... ரயில் பயணம் உங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது என்று உங்க வரிகளில் தெரிகிறது நல்ல கவிதை வாழ்த்துக்கள் உங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்
மிக நன்றாய் இருக்கிறது உங்கள் இரயிலுடனான இணைப்பு ப்ரனா. வாழ்த்துக்கள். இரயிலை வைத்து, சேர்க்கையும் பிரிவும் கொண்ட பத்தி ஒன்றை எழுதலாம் எனத் தோன்றுகிறது. -ஸ்ரீ
குழந்தையின் கும்மாளத்தோடு குதூகலமாய் நீங்கள் விரும்பும் இரயில் பயணம் பற்றி நீங்கள் சொன்ன விதம் அழகு பிரனா.
prana neengal sonnathu pol anaivarayum kavarum oru iniya payanam thaan rayil payanam.... super prana...