எதையெதையோ தேடுகிறோம் நாமும்! எங்கெங்கோ ஓடுகிறோம் நாளும்! கிட்டியதைத் துறந்து மற்றொன்றை நாடுகிறோம்! கிட்டா விட்டால் மட்டும் உன்னை குறை கூறுகிறோம்! சற்றேனும் சிந்தியாது உனை மட்டும் எப்போதும் நிந்திப்பதில் மட்டும் சளைக்காமல் இருக்கிறோம்! எம் தவறு ஏதென்று அறியாமல் இருக்கின்றோம்! அறிந்தாலும் பிறர் சொல்ல, அடங்காது சீறுகிறோம்! அருகிருந்தும் உனை மட்டும் புறக்கணிக்கப் பழகிவிட்டோம்! அறியாமை இது என்று, என்றோ ஒரு நாள் உணர்ந்திடுவோம்! சிறகிருந்தும் எப்போதும் நடக்கின்ற பறவையதைப் போல் நாளும் அறியாமை எமை மூட, பிறவற்றைத் தேடுகிறோம்! கிட்டியவை, கிட்டாதவை அனைத்துக்கும் அப்பால் நீ இருப்பதை காலம் சென்ற பின்பு அறிந்திடுவோம்! அது வரையிலும், அதற்கு அப்பாலும் நீ எப்போதும் போல் எமைக் காப்பாய் என்றே யாம் இப்போதும் வேண்டுகிறோம்!