நேயர் விருப்பம் வேதா @singapalsmile வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்த்தவை பத்து உறவில் முதலாக இருக்க வேண்டும் ! சிறகு எனக்களித்து உயர்த்த வேண்டும் ! வருடும் வார்த்தைகள் பேச வேண்டும் ! திருடும் பார்வைகள் வீச வேண்டும் ! மடல்கள் எனக்காக எழுத வேண்டும் ! உடலைத் தாண்டியும் புணர வேண்டும் ! தாய்மை வரமெனக்கு அளிக்க வேண்டும் ! சேய்மை மாறாமல் அணைக்க வேண்டும் ! துவைத்த ஆடைகள் மடிக்க வேண்டும் ! சுவைத்து உணவினை இரசிக்க வேண்டும் ! இவையும் இன்னமும் எண்ணமுண்டு இங்கு அவையில் வெளியிட நெஞ்சில் நாணமுண்டு ! வாழ்க்கைத் துணைக்கு செய்ய நினைத்தவை பத்து உற்ற தோழியாய் இருக்க வேண்டும் ! பற்றுக்கோல் தந்து நடத்த வேண்டும் ! ஆசைக் கனவுகளைக் கேட்க வேண்டும் ! மீசை தடவி முத்தமளிக்க வேண்டும் ! பிடித்த நிறத்தில் ஆடையுடுத்த வேண்டும் ! மடித்த சட்டைக்குள் புதைய வேண்டும் ! பிரிந்த நட்போடு இணைக்க வேண்டும் ! புரிந்தும் சிறுசண்டை போட வேண்டும் ! தனிமை அவ்வப்போது கொடுக்க வேண்டும் ! இனிய கவிதைகள் கிறுக்க வேண்டும் ! இனியவை இங்கு சொன்னேன் இருபது ! கனிந்ததே நெஞ்சில் காதல் இப்போது ! Regards, Pavithra
super pavithra kalaignarin iniyavai irubathil italy patri varukayil cleopatravin kaathal varuvathu pol thangalathu romance irubathu...
பொக்கிஷ வரிகள். பல ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு கிடைத்திருக்க கூடாதா? என் வாழ்க்கைத் துணைக்காக அவள் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்யாமல் இல்லை ஆனால் உணர்த்த தவறினேன் அவள் பார்வையில். அவள் நிம்மதியை தொலைத்தாள். நான் காதலை தொலைத்தேன்.
Excellent ! Part of my thoughts expressed nicely. Maybe everyone thinks like this , regarding self and spouse. Congrats. Best Wishes! ksuji.