தன் மகனுக்குச் சமர்த்துப் போதாது என, தன் நண்பரிம் புலம்புவார் தந்தை ஒருவர்! தன் நண்பரிடம் இதை நிரூபிக்க விரும்பி, தன் கைகளில் வைத்தார் இரு நோட்டுகள்! வலது கையிலே இருந்தது ஐம்பது ரூபாய்; இடது கையிலே இருந்ததோ பத்து ரூபாய்! 'ஒரு நோட்டை எடுத்துக்கொள்' என்றதும், மறு நொடியில் எடுத்தான் பத்து ரூபாயை! 'இவன் இத்தனை அசடா?' என்ற நண்பரும் அவனை ஒரு ஐஸ்கிரீம் கடையில் கண்டு, 'ஏன் ஐம்பதை விட்டுப் பத்தை எடுத்தாய்?' என்று அதிசயித்துக் கேட்டிட, சொன்னான், 'என்று ஐம்பது ரூபாயை எடுக்கின்றேனோ, அன்று முடிந்துவிடும்தானே இந்த ஆட்டம்!' :hide: