1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

ஆறு தலைகள் கொண்ட முருகன் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்.?

Discussion in 'Posts in Regional Languages' started by Thyagarajan, Sep 24, 2020.

  1. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,744
    Likes Received:
    12,564
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:ஆறு தலைகள் கொண்ட முருகன் எப்படி ஒரு பக்கமாக படுத்து தூங்குவார்.?


    (படித்ததில் பிடித்த பதிவு)

    தி. க. M. R. ராதாவை தலை குனிய வைத்து யோசிக்க வைத்த திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் !
    கிருபானந்த வாரியார் திருமணம் ஒன்றிற்குத் தலைமை தாங்கச் சென்றிருந்தார்.
    அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க திருமண பேச்சுக்கு இடையே நடிகவேள் தனது வழக்கமான பாணியான கிண்டலுடன், “சாமி. முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ, ராத்திரி தூங்கும் போது எப்படி ஒரு பக்கமா படுப்பாரு.?

    கூடி இருந்தவர்கள் அனைவரும் சிரிக்க.. வாரியாருடன் வந்தவர்கள் தர்ம சங்கடத்துடன் நெளிந்தார்கள்.

    வாரியார் புன்சிரிப்புடன், திருமண ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருந்த மண மக்களின் தந்தையரை அழைத்து அவர்களிடம் கேட்டார், “நேத்து தூங்கினீங்களா?”

    அவர்கள் இருவரும் “இன்னைக்குக் கல்யாணத்தை வச்சுக்கிட்டு எங்க சாமி தூங்கறது” என்றார்கள்.

    வாரியார், நடிகவேளைப் பார்த்துச் சொன்னார்.

    ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்தி வைக்க நினைச்ச இவங்களுக்கேத் தூக்கம் வரவில்லை.

    உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படி தூக்கம் வரும்? அவருக்குத் தூங்கறதுக்கு நேரம் ஏது?” என்றார் வாரியார் சுவாமிகள்.

    இதைக் கேட்ட நடிகர் ராதா தலை குனிந்தார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா தனது இறுதி வாழ் நாளில் கடுமையான இரத்த புற்று நோயால் பாதிக்கப் பட்டு…

    இறுதியில் காஞ்சி மகா பெரியவாளிடம் தனது தவறுக்கு மன்றாடி மன்னிப்பு கேட்டு.. தனது நோயின் வலி.. வலி.. வலி .. தாங்க முடியவில்லை எனக் கூறி அவரிடம் சரணடைந்து வலி இல்லாமல் மரணமடைந்தார் என்பது மறைக்கப்பட்ட உண்மை!

    இன்றைக்கு செய்யும் நன்மை தீமைகளை நிச்சயம் மனிதன்
    அனுபவித்தே தீர வேண்டும்....முடிந்த வரை நன்மையே செய்வோம்.
     
    Loading...

Share This Page