ஒருவன் நண்பனிடம் வேகமாக ஓடி வந்து, 'ஒரு அதிசயம் தெரியுமா?', எனக் கேட்டான்! தப்பாது உற்சாகம் அவனைத் தொற்றிவிட, 'இப்போதே விஷயத்தைக் கூறு', என்றான்! 'அடுத்து உள்ள ஊரில், ஆயிரம் காக்கைகளை எடுத்தானாம் ஒருவன், வாய் வழியாக!' எனச் சொல்ல, மிகவும் அதிர்ந்தவன் வினவினான், சொன்னது யார் என்று; யாரெனத் தெரிந்ததும், அவனிடம் சென்று விசாரிக்க, அவனோ, 'நான் அவனிடம் சொன்னது நூறு காக்கைகளே!' என, அந்த விஷயம் கூறியவனைத் தேடிச் செல்ல, 'இந்த விஷயம் நான் சொல்லவில்லை; நான் ஒரு காக்கை என்றுதானே கூறினேன்', என்றிட, ஒரு காக்கை என்றவனை, அவன் தேடிச் செல்ல, 'இது என்ன அநியாயம்! நான் சொன்னதே வேறு! பொதுவாகக் கருப்பு நிறத்தில் வாயிலே வந்தது, என்றுதானே சொன்னேன்', என்று தெளிவாக்க, 'ஒன்று மட்டும் கூறு; யார் இதைச் செய்தவன்?' தொடுத்த வினாவுக்கு பதில் வந்ததும், விடாது அடுத்ததாகக் காணச் சென்றான், வாயிலெடுத்த பிருஹஸ்பதியை! நடந்ததைக் கேட்டு, சிரித்து, 'பிரமாதமாக ஒன்றும் நடக்கவே இல்லையே! வயிறு கலக்கிச் சங்கடம் செய்தது, நேற்றைய தயிரில் ஏதோ பூச்சியைக் கண்டதால்! நானும் நண்பனிடம், வாயில் எடுப்பேனோ, என்னவோ, என்றுதானே சொன்னேன்!' என்று விளக்கினான்! [/COLOR] :spin . . :crazy . . :spin
:rotfl:rotfl Very funny !!!!!!!!!! Two men gossiping. One says, " That's about it ! I have already told you twice as much as he said to me !!!!"
vadhandhi kilappradhula pengala vida aangal romba mosam-nu sollitteenga... indha kavidhai padichadhula andha oru dhrupthi... nice one again... ilt