*ஆடிப் பெருக்கு!* ஆடிப்பெருக்கதனில் ஆனந்தம் பெருகட்டும் புதுப்புனல் பொங்கி வந்து பூமி குளிரட்டும் காவிரி வெள்ளத்தில் நம் கவலைகளும் ஓடட்டும் விதைத்த பயிர் வேர்விட்டு வாடிய பயிர் தழைக்கட்டும். (பெண்டிர்) ஆற்றில் குளித்து அம்மன் பூசை செய்யட்டும் குடும்பம் சேர்ந்தமர்ந்து கலந்த அன்னம் உண்ணட்டும். இந்நன்னாளில் ஒரு உறுதி எடுத்திடுவோம் ஓயாமல் அதற்குழைப்போம் நாம் வாழ வழிசெய்யும் நதிகளெல்லாம் காத்திடுவோம் நீரின்றி உலகில்லை நதியின்றி நல் நீரில்லை நன்றாக இதை உணர்ந்து நாம் ஏற்போம் உறுதி மொழி. அன்புடன், RRG 03/08/2022