வாவியுள் செய்ய தாமரை ஆவி கொய்யுமென் தேவதை ! பாவியேன் காதல் கைதியாய் தேவியின் இதயம் பூஞ்சிறை ! செல்லிடப் பேசி சிணுங்கியே சொல்லிடும் காதல் சேதியை ! மெல்லவே அவள் நினைவுகள் கொல்லுமே எந்தன் தனிமையை ! சிறுவிதழ் முத்தம் கிடைக்குமா ? குறுகுறுக்கும் என் நெஞ்சமும் ! துருதுரு விழிகள் காண்கையில் , சுறுசுறுக்கும் என் வாலிபம் ! வைகறை செம்மை வண்ணத்தை மைவிழிக் கன்னம் பூசினால் கைவிரல் கோர்க்கும் நாளுக்காய்த் தைவரைக் காக்க முடியுமோ ? கோள்கள் நன்றாகக் கூடிடும் நாளுமே பார்க்க வேண்டுமா ? தோளென்னை நீ சேர்ந்திடு, தேளல்ல நானும் தங்கமே ! மாலை ஆனதும் மையலும் லீலை செய்யுதே காதலி ! சேலைத் தலைப்பிலே நூலென, சோலையே எனை மாற்றடி ! காதலும் இந்தக் காமமும் சாதல் இல்லாத சாஸ்வதம் ! ஆதலால் என்னை அணைத்திட ஓதல் வேண்டாமே சாஸ்திரம் ! ஆசையில் நானும் தவிக்கிறேன் ! மீசையைத் தடவிப் பார்க்கிறேன் ! பூசைக்கு மலரைக் கேட்கிறேன் ! ஓசையுன் காதில் விழுந்ததா ? Regards, Pavithra
அன்பு மகள் பவித்ரா, @PavithraS , யார் இந்தப் பவித்ரன்? கொஞ்சும் தமிழில் நெஞ்சம் அள்ளும் வஞ்சியைக் கொஞ்சி எங்கள் நெஞ்சம் அள்ளி விஞ்சுகிறானே! நன்று நன்று!! அஞ்சுகமே அணைத்துச் சுகம் சேர்!