மலையும் ஒரு அழகு பள்ளத்தாக்கும் ஒரு அழகு சுழித்தோடும் நதியும் அழகு சலனம் இன்றி ஓடும் நீரோடையும் அழகு இளமையில் அழகென தோன்றியவை எல்லாம் ஆபத்தாக தெரிகிறது ஆண்டுகள் போக போக ஏன் இந்த மாற்றம் ரசனையிலே என்ற கேள்வி எழுந்தது கிடைத்தது ஒரு பதில் ரசனையில் மாற்றம் இல்லை வயதின் தாக்கம் உடலில் மாற்றம் இதுவே அழகெல்லாம் ஆபத்தாக தோன்றிய ரகசியம் இளங்கன்று பயம் அறியாது என்று சொன்ன என் தாய் வந்தாள் நினைவிலே அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கொண்டேன் இன்று அதையே நானும் சொன்னேன் என் பிள்ளைகளிடம் ஒரு தாயாக
@periamma :- fantastic poem, life is going in circles right,what our parents said we are saying now, what they experienced we are experiencing now! Very beautifully written with the description of Nature! Azhagiya Kavidhai !