மலையும் ஒரு அழகு பள்ளத்தாக்கும் ஒரு அழகு சுழித்தோடும் நதியும் அழகு சலனம் இன்றி ஓடும் நீரோடையும் அழகு இளமையில் அழகென தோன்றியவை எல்லாம் ஆபத்தாக தெரிகிறது ஆண்டுகள் போக போக ஏன் இந்த மாற்றம் ரசனையிலே என்ற கேள்வி எழுந்தது கிடைத்தது ஒரு பதில் ரசனையில் மாற்றம் இல்லை வயதின் தாக்கம் உடலில் மாற்றம் இதுவே அழகெல்லாம் ஆபத்தாக தோன்றிய ரகசியம் இளங்கன்று பயம் அறியாது என்று சொன்ன என் தாய் வந்தாள் நினைவிலே அன்று அவள் சொன்ன வார்த்தைகளின் பொருளை உணர்ந்து கொண்டேன் இன்று அதையே நானும் சொன்னேன் என் பிள்ளைகளிடம் ஒரு தாயாக
That was a nice one Periamma. A beautiful one often comes with an invite to an unknown risk. Thanks for sharing. -rgs
காலங்கள் மாறும்.....காட்சிகள் மாறும்.....பழைய பாடல் கேட்கிறது அம்மா........நலமா அம்மா? இந்தியா வந்துவிட்டீர்களா?
நன்றி ப்ரியா.காலங்கள் மாறுவதால் கோலங்கள் மாறும் .காட்சிகளும் மாறும்.ஆனால் தாய் உள்ளம் மட்டும் மாறாது.செப்டம்பரில் தான் இந்தியா வருகிறேன்.நம் கவிதை தளம் இப்ப கல கலப்பாகி விட்டது.சந்தோஷமா இருக்குமா.
ஆமாம்மா....ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! புதிய வரவுகள் அதிகம்! ஆனாலும் பழையவர்கள் வரவு குறைந்தே விட்டது கொஞ்சம் வருத்தம்
உண்மை தானே மா...அது சிறு வயசில புரியாது....அனுபவத்தில வந்த உண்மையை பிறர் நமக்கு கூறினாலும்...நாம் அதை அனுபவித்த பின்னரே உணர்கிறோம்....கவிதை எப்போதும் போல கருத்துடன் கலந்து சிறக்கிறது!!