தாய்க்கு குழந்தையின் சிரிப்பு அழகு குழந்தைக்கு அன்னையின் பேச்சு அழகு காதலனுக்கு காதலியின் கதை சொல்லும் கண்கள் அழகு அவளுக்கோ அவன் அரும்பு மீசை அழகு பகலில் சுட்டெரிக்கும் சூரியனுக்கு இரவில் இதம் தரும் நிலா அழகு அமைதியின்றி தவிக்கும் மனதுக்கு தென்றலில் ஆடும் இலைகள் அழகு இலைகளுக்கு பூக்கள் அழகு இத்தனை அழகும் நிறைந்ததே இயற்கை எனும் ஓவியம்