அலையில் எறிந்த பொருளும் சில சமயம் மறைந்து வேறிடத்தில் கரை ஒதுங்குவதுண்டு. நாம் அலட்சியம் செய்த எவரும் மறுபடி எப்போதும் நமைப் பொருட்படுத்தியதுண்டோ? பல நிறைகள் உண்டு எனத் தெரிந்த பின்னாலும், சிறு குறையைக் கண்டு ஒருவரை ஒதுக்கிட வேண்டாம். பொருளிலோ, அறிவிலோ அன்றி உடல் நலத்திலோ பெருமிதம் கொள்பவர் தலையும், அவை மிகுந்தவர் முன் நாணும். ஒதுக்குவதை இயல்பாகக் கொண்டு விட்டால், தனியே ஒதுங்குவதும் ஒரு நாள் நிச்சயம் நேரும். இலட்சியம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அலட்சியம் வெகு தூரம் விலகியே நிற்கும். -ஸ்ரீ
அருமையான வரிகள்..Rgs. அலட்சியத்தை அலட்சியப் படுத்தலாம், தவறில்லை, சரியா நான் புரிந்துகொண்டது.. Sriniketan