உன் நினைவுகள் எட்டிப் பார்க்கும் பொழுது இதயம் வலிக்கத் தான் செய்கிறது நம் சம்பாஷனைகள் நினைவு வரும் பொழுது சற்றே கண்ணீர் திரள தான் செய்கிறது நிமிடங்கள் ஓடுவதும் தெரியவில்லை நாட்கள் நகர்வதும் புரியவில்லை உன் துன்பங்களில் இருந்து என்னை விலக்கி வைத்ததிலும் உடன்பாடில்லை எங்கிருக்கிறாயோ நீ? நானறியேன் என்ன செய்கிறாயோ நீ? நானறியேன் எந்த மனநிலையிலோ நீ? நானறியேன் தனிமை விரும்பி சென்றாய் என அறிவேன் தன்னம்பிக்கையோடு வாழ்வில் வெற்றி கொள்வாய் என்பதையும் அறிவேன் விரைவில் ஒரு நாள் நீ சிறப்புற்று விளங்குகிறாய் என அறியும் பொழுது இன்று உன் நட்பை தற்காலிகமாக இழந்து நிற்கும் என் தவிப்பும் அர்த்தம்முள்ளதாகவே இருக்கும் .....
jskls , Your friend indeed is a lucky person to have got a friend like you.. I think she would also have been the same to you, my wishes for you to meet her soon... Regards, Pavithra PS (we both posted one poem around the same time , sweet coincidence )
நட்புக்காக தவிக்கும் தவிப்பு கவிதையில் தெரிகிறது .இப்படிப்பட்ட சினேஹிதி கிடைக்க உங்கள் தோழி கொடுத்து வைத்திருக்க வேண்டும்