அம்மா என்றே அடையாளம் பெற்றுவிட்ட இந்தப் பெண்மணியைப் பற்றி என்ன சொல்லுவது ? கருத்துரீதியாகக், கொள்கை ரீதியாக வேறுபாடுகள் பலவிருப்பினும், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த இரும்புப் பெண்மணிக்கு எனது இறுதி வணக்கங்கள் ! அவரது இறப்பு கூட ஒரு போராட்டமாகவே நிகழ்ந்தது இறைவன் திருவுளமோ ? அன்னார் விட்டுச் சென்றுள்ள வெற்றிடம் மிகவும் பெரியது.தமிழகத்தின் அடுத்த நிலை என்ன என்பது இப்போது ஒரு கேள்விக்குறிதான். திரு.எம்.ஜி .ஆரின். மறைவுக்குப் பின் அ .தி.மு.கழகத்தைக் கட்டுக்கோப்பாக வழிநடத்திச் சென்ற செல்வி.ஜெ.ஜெயலலிதாவைப் போல ஆளுமைப்பண்பும், பலதரப்பட்ட அறிவும், பார்வையும் கொண்ட ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வேண்டுமென்று விரும்புகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்கட்டும். மறைந்து விட்ட இந்தத் தலைவருக்கு அவர் விரும்பியிருக்கக் கூடிய வகையில் கண்ணியமான இறுதி அஞ்சலியை மக்கள் செலுத்த வேண்டும். இறைவன் அருளட்டும்.
Sad. A woman who lived by her personality the most charismatic and enigmatic, creating a cult followers ruled the roost in her exclusive style in the male dominant political field. May her soul rest in peace. A true leader who stood for the rights of women. The void created by her loss can never been filled
குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல். ஒருவர் இறந்த பின் அவரைத் தூற்றி அவதூறாக ஊடகங்களில் அவரை விமர்சித்து எழுதும் மனிதர்களின் பண்பற்ற நிலை கண்டு மனம் வெதும்புகின்றது. கடந்த பல ஆண்டுகளாக மக்கள் நலனுக்காகவே தனது வாழ்வை அர்ப்பணித்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.