பேதை நான் தூக்கம் கெட்டு துயருற்று துவண்டு விழித்திருந்த நடுசாமத்தில் இஷ்டப்பட்டு சத்தமில்லாமல் துணைக்கு வந்த "நிலாவே" உன் துணை என்னவோ ஆறுதல் தான். பேசிக் கொள்ள கதைகள் இல்லை நம்மிடம் இருந்தும் பார்வை பறிமாற்றத்தில் போட்ட ஒப்பந்தம் மறந்து போனதோ உனக்கு. நேற்று சொல்லாமல் சென்றதன் அவசர நிலை என்னவோ? தனிமையில் உன் வருகைக்காக விழித்திருந்த வேதனை தான் மிச்சம். என் முகம் காண வெட்கப்பட்டு இன்று மறைந்து நின்று துணைக்கு வருகின்றாயா?? வேண்டாம் உன் கரிசனம். மன்னித்து உன்னுடன் நடைப் போட்டால் மறுபடியும் சொல்லாமல் சென்றால் தாங்காது என் மனம் கண்டும் காணாததை போல் கடத்தி கொள்கின்றேன் எஞ்சிய மிச்ச இரவுகளை தனிமையின் துணையோடு.
Hey wonderful huh :thumbsup...so beautifully written :clap...loved it... ur poem reminds me "Jaamathil Vidukiraen.. Jannavazhi Thøøngum Nilaa.." ma fav line from the song dhimu dhimu...:cool2:
CB good one. No moon to full moon & full moon to no moon - what a way to convey the pain. The moon does affect our stability - blame it on the moon
அருமையான கவிதை சிந்தனை! பத்து மாதங்கள் காத்திருந்து பெற்றுக்கொள்ளுதலில் தான் தாய்மையின் சிறப்பு! தினமும் வருவதில் நிதமும் தெரிவதில் இல்லை மதிப்பு!