நீரை விட அடர்த்தியானது குருதி இதை சொன்னது யாரோ தெரியவில்லை அந்த குருதியை விட வலிமை வாய்ந்தது அன்பு இதை சொல்வது அன்புக்கு அடிமையான இந்த எளியவள் அன்புக்கு உருவம் இல்லை ஆனால் அன்பை உணர முடியும் விண்ணுக்கும் மண்ணுக்கும் விஸ்வரூபம் எடுக்கும் அன்பை கோல் கொண்டு அளக்க முடியாது தராசு கொண்டு நிறுக்க முடியாது மழையெனப் பெய்யும் அன்பின் வேகத்தை தாங்க முடியவில்லை தடுக்க முடியவில்லை அன்பு வெள்ளத்தில் மூழ்கி திணறுகிறேன் எங்கு நோக்கினும் கருணை கண்கள் அன்பு எனும் காந்தம் கொண்டு என் உள்ளத்தை ஈர்த்து செல்கின்றதே ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை ஒருவருடன் ஒருவர் பேசி பழகவில்லை ஆனாலும் ஏன் இந்த பாசப் பிணைப்பு ஆண்டவனே என் கேள்விக்கு பதில் சொல்வாயா கர்மவினையால் இன்னல் மட்டும் வருவதில்லை இன்பமும் வரும் என்று அறிந்து கொள்ள எவ்வளவு கால தாமதம் என நினைத்து சிரித்தேன் அன்பை பொழியும் மக்களே நீவிர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது இந்த அம்மாவின் அன்பு உள்ளம் இந்த கவிதை ஏன் என்று பலர் நினைக்கலாம் .வறண்ட பாலைவனமாய் இருந்த உள்ளத்தில் அன்பு எனும் நீர் ஊற்றி பாசப்பயிர் வளர்த்து என்னையும் வளமாக்கிய அன்பு மக்களுக்கு ஒரு சிறு அன்பு காணிக்கை .
பெரியம்மா, நீங்கள் மற்றவரிடம் செலுத்தும் அன்பே தங்களிடம் திரும்ப வருகிறது .. மிகவும் உணர்ச்சி மயமாக எழுதி விட்டீர்கள் ! அன்பு அன்னை தாங்கள் அன்பை பொழிபவர் அக்கறையை காட்டுபவர் ஆதரவாய் இருப்பவர் கருணையே நிறைந்தவர் வாழ்வின் இலக்கணமாய் திகழ்பவர் அன்பை அள்ளித் தருபவருக்கு பாசத்தை தவிர எதை தர இயலும் எங்களால் பெற்ற தாயிடம் அளவளாவ கொடுத்து வைக்கவில்லை தங்களை வாழ்வில் அன்னை என அழைக்கும் பேறு கிட்டியதில் அளவில்லா மகிழ்ச்சி உங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கும் தலை வணங்குகிறேன்