அன்புள்ள நட்புடன்...... இங்கு எனக்கு கிடைத்த உறவுகள் ஆயிரம் அன்னையை கூட அடைந்துவிட்டேன் வேணியின் உருவில்..... அத்தனை உறவும் ஒன்றாய் கண்டேன் உங்களின் தயவில்..... நீங்கள் திறந்த அனைத்து கவிதை கதவுகளையும் தட்டி பார்த்திருக்கிறேன் - கவிதை படிக்க அல்ல; அதற்கான உங்களின் பின்னூட்டம் பார்க்க.... எத்தகைய மனச் சோர்வும் காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பில் வரும் உங்களின் உற்சாக வார்த்தை கேட்டுவிட்டால்..... உங்களின் அமைதியே சுட்டிக்காட்டிவிடும் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் உங்களின் பின்னூட்டமே அறிவித்துவிடும் என் கவிதைக்கான மதிப்பெண் பட்டியலை தோள் கொடுத்து தாங்கும் தந்தை ஸ்தானத்தை உங்களுக்கு அளித்து மரியாதை எனும் பெயரில் விலகி நிற்க எனக்கு விருப்பமில்லை தாத்தாவாக இருக்க பாவம் உங்களுக்கும் மனமில்லை...... என்னுடைய வேண்டுகோள் ஒன்று தான் உறவாக வேண்டாம் தாங்கள் எனக்கு ஊனம் எங்கேனும் இருந்தால் ஊன்றுகோலாய் இருங்கள் என்பதுதான் !!!!!!! (என்னை கவிதை எழுத தூண்டிய தங்களின் நட்புக்காக )
அன்புள்ள ப்ரியா, உன் அன்பில் நான் உருகித்தான் போனேன். ஜே வீ என்ன ஆவாரோ தெரியவில்லை. அவருக்காய் உனது ஆயிரமாவது நூல் கண்டு மிக்க மகிழ்ச்சி தோழி. தோள் கொடுக்கும் தோழமைக்காய் நினது வரிகள் கண்டு மெய் சிலிர்த்தேன். வாழ்த்துக்கள் தோழி
deva... beautiful lines... and true ..... nats fb's are real fun to read.... his words are always soothing.... conversations with him will always leave me light hearted and the feel is always good .... he's the best friend who is always ready to motivate, congratulate you.... Nats, may be i dont know to write beautiful lines like veni, yams, deva... but would always cherish the words with you.....
deva....i like these lines very much.... solla vaarthaigale illayadi penne..... ingu nee sonna ovvoru vaarthayum arumai..unmaiyulum unmai..... nats kugaga nee ezhuthiya intha kavithai..un ullathil irunthu vanthavai mattum alla engal ovvoruvarin ullathilum iruppathu than... athai nee ingu velippaduthiyatharkku mikka nanri thozhi....
தேவதையானவளே! அருமையடி உன் வரிகள் அனைத்தும்! கவிவரியால் இதயங்களை பறிக்கும் வித்தை நீ படித்ததெங்கே?? தெரிந்திருந்தால் நானும் பயின்றிருப்பேன்! உன் போல் பாசமாய் கவி பாட! அன்பு நட்புடன் உன் கவி அன்பில் இருந்து இனி வெளிவர போவதில்லை! எங்களை கண்டு கொள்ள போவதும் இல்லை! வார்த்தைகள் இல்லை! வாழ்த்துகள்! :thumbsup
உறவாக நான் இருப்பேன், உன் முயற்சிகளுக்கு உரமாக நான் இருப்பேன், உறுதியான நட்பினைப் போற்றும் உனக்கு ஊன்றுகோலாய் நான் இருப்பேன். உன் எண்ணங்களை எழுத்தாய்ப் படைத்திட எழுதுகோலாய் நான் இருப்பேன். உன் மனதினில் கற்பனயைத் தூண்டும் ஊதுகுழலாய் நான் இருப்பேன். என்றும் உன்னுடன் நட்பாய்த் தானிருப்பேன், அது தொடர தவமிருப்பேன். ப்ரியா இது போல் கவிதை எழுதி எனை வாக்கில்லாமல் செய்து விட்டாய். உன் உள்ளத்தில் இருந்து வந்த ஒவ்வொரு வரிகளும், உன் அன்பின் அடையாளங்கள். அவை எனக்குத் தானா? நான் அதற்கு தகுதி உள்ளவனா? உன் திறமையை நீ அறியாய். அதை உணர்த்தி, ஊக்குவித்தமையே என் பங்கு - அதை நீ உணர்ந்து படைக்கிறாய், நானும் கண்டு வியக்கிறேன். நன்றிகள் பலப்பல கலந்த வாழ்த்துக்கள் டா பிரியா..........
azhagaana kavithai nats pathi ka......:clap i like these lines very much..... rhyming lalaam ezhuthi pinni pedaledukareenga.......:thumbsup