'தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்', எனப் பாடிச் சென்றார் பாரதியார்! இனி இதனை நிஜமாக்குவோம் என்று அரசுக்கு ஒரு இனிய எண்ணம் வந்திட, தோன்றியது ஒரு சேவை! பெரிய கோவில்களில் எல்லாம் செய்திட விழையும் அரிய சேவையான அன்ன தானம்தான் அது! ஆனால் உடல் நலம் குன்றி, வேலை செய்ய இயலாது போன- வுடன், ஏழைகள் வந்து பெற வேண்டிய இலவசத்தை, சோம்பேறி வாழ்க்கை வாழ நினைக்கும் சில நபர்கள், தாம் தினம் வந்து உணவைப் பெற்றுச் செல்லுவதால், பணம் திரட்டிச் செய்யும் நற்பணி ஒன்று, சோம்பேறி இனம் வளர வழி காட்டுவதாக மாறிவிட்டது இன்று! அன்ன தானம் பெறுவோரைத் தேர்வு செய்த பின்னர் அன்னம் அளித்தால் மட்டுமே இதைத தடுக்க இயலும்! :my2cents