உதடு சுழித்து உடல் முறுக்கி ஆரோக்கியத்தை அறிவிக்கும் குழந்தைகளின் முதல் அழுகுரலை…இன்றைய அன்னையரால் கேட்க முடிவதில்லை! - தாயையும் சேயையும் தனித் தனி அறைகளில் பிரித்து போடுகிறது நவீன மருத்துவ உலகம் - குழந்தையை குளிப்பாட்டி.. பவுடர் பூசி பொட்டிட்டு அழகு பார்த்து ரசிப்பது பணிப் பெண்ணின் கடமைகளில் ஒன்றாகி போனது..! - இன்று மழலையின் குறும்பும் குதூகலுமும் பாலர் பள்ளியின் சுவற்றுக்குள் சுருங்கிப் போனது..! - வேலைக்காரியின் வேக அதட்டலில் குழந்தையின் சுட்டித்தனம் சுறுசுறுப்புடன் சேர்ந்து மன வளர்ச்சியும் அடங்கிப் போச்சு! - நாகரிக உலகின் நகர வாழ்க்கை நசுக்கிப் போட்டது அன்னையின் உறவை! - அவசர யுகத்தில் சொந்தங்கள் தொலைந்து போனது போல்… நாளைய குழந்தைகளும் அன்னையின் அன்பை அறியாமலே போயிடுமோ..! ========================= >ஒதியக்காடு அழகிரிவேல் நன்றி; தமிழ்முரசு 30-1-11
குழந்தையை அன்னை அவள் வயிற்றை அமுக்கி எடுத்த காலம் போய் வயிற்றை நோண்டி எடுக்கும் காலம் இது கவிதை நன்று .......பகிர்ந்தமைக்கு நன்றி