உன் அன்பில் உருகியதாலா?? உன் சமையல் ருசியில் மயங்கியதாலா?? உன் மடியின் சுகம் உணர்ந்ததாலா?? உன் தாலாட்டில் மெய்மறந்ததாலா?? உன் வேலைச்சுமை கண்டு வியந்ததாலா?? உன் வாழ்க்கையின் அர்த்தம் புரியாததாலா?? உன் மளிகைக் கணக்கு புரியாததாலா?? உன் மனக்கணக்கு சூத்திரம் தெரியாததாலா?? உன் பொறுமையின் எல்லை தேடியதாலா?? உன் தியாகத்தின் உயரம் தெரியாததாலா?? எந்த தாய்க்கு கொடுப்பதென்று குழப்பமோ?? பாவம்.. உனக்கு விடுமுறை கிடைக்கும் போது விருது வழங்கக் காத்திருக்கிறார்களோ?