1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அன்னதானம்

Discussion in 'Posts in Regional Languages' started by pottiamman, Sep 14, 2019.

  1. pottiamman

    pottiamman Junior IL'ite

    Messages:
    57
    Likes Received:
    6
    Trophy Points:
    13
    Gender:
    Female
    அன்னதானம்

    மகாளயபட்ச தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். தர்ப்பணம் முடித்த பிறகு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாக கிடைக்கும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது நமது கடமை. அதை மகாளயபட்சத்து அன்று அளிப்பது மிகவும் சிறப்பு.

    எனவே மகாளய அமாவாசை அன்று பித்ருக்களு க்கு தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் மறக்காமல் காகங்களுக்கு உணவும், பசுக்களுக்கு அகத்திக் கீரையும் அவசியம் அளிக்க வேண்டும். பகல் நேரத்தில் நமக்கு வசதியான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தானம் அளிக்கலாம்.

    காலையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை என்று அன்ன பிரசாதம் எதுவாக இருந்தாலும் தயார் செய்து அளிக்கலாம். நாம் எந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனம் குளிர்ந்து நம் சந்ததியினருக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள்.
     

Share This Page