1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அனிச்சம்

Discussion in 'Regional Poetry' started by veni_mohan75, Mar 29, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எத்தனை அன்பு தோழி உனக்கு என்னிடம்? நான் என்ன செய்தேன் அதற்காக?? உனது இடைவெளி இல்லாத அலுவல்களுக்கிடையிலும் வந்து எனது கவிதை படித்து அதற்க்கு பின்னூட்டமும் கொடுத்து இருக்கிறீர்கள்.

    உங்கள் அன்பால் நனைந்த என் இமைகளை சிரமத்துடன் திறந்தே இந்த பின்னூட்டம் கொடுக்கிறேன் தோழி. என்ன செய்வது நான், இங்கே கவிதைகள் மலை போல குவிந்து இருக்கிறது, எதற்கு பின்னூட்டம் முதலில் தருவது என்றே தெரியவில்லை. பின்னூட்டம் எதிர்பார்க்கும் நண்பர்களை மகிழ்விக்க பின்னூட்டம் தருவதிலேயே எனக்கு வெகு நேரம் போய்விடுகிறது.

    மேலும், மலர் பற்றிய கவிதைக்கு, கூகிளில் வலை வீசித் தேடி தகவல்களைத் திரட்டி ஒன்றுக்கு இரண்டு முறை அதை சரி பார்த்து, வார்த்தைகளை கோர்த்து, கவிதையாகச் செய்வதற்கு கொஞ்சம் நேரம் போய் விடுகிறது. இதற்குள் எனது மகன் பள்ளியில் இருந்து வந்து விடுகிறார். அவர்க்கும் தேர்வுகள் நடப்பதால் தான் இந்த தாமதம். பின்னூட்டம் தருவதில். உங்கள் பின்னூட்டங்களை நான் படிப்பதில்லை என என்ன வேண்டாம். எல்லாருடைய பின்னூட்டங்களையும் நான் படித்து விடுவேன். அதற்க்கு பதில் தரத்தான் தாமதமாகி விடுகிறது. நீங்கள் இதை சரியாகவே புரிந்து கொள்வீர்கள் எனும் மகிழ்ச்சியில் உள்ள உங்கள் அன்புத் தோழி.
     

Share This Page