குச்சிமிட்டாய்க்காக ஜட்டிகிழிய கட்டி பொரண்டு சண்டை போட்ட நாட்கள் குண்டு மாங்காய் திருடி தின்று கட்டி பழுத்து அழுத நாட்கள் மூக்கு ஒழுக சேமிய ஐஸ்சை நக்கி தின்ற நாட்கள் பிளாஸ்டிக் கவரை கையில் போட்டு, நாய் பீ கலந்து,மாஞ்சா போட்ட நாட்கள் மீன் என நினைத்து சாக்கடையில் தவளை குட்டி பிடித்து அதற்கு கால் முளைக்கும் வரை வளர்த்த நாட்கள் இனி வருமா அந்த இனிய நாட்கள்?