பெற்ற தாய் தந்தைக்கு நல்ல மகள் உடன் பிறந்தோருக்கு பாசமிகு சகோதரி கணவருக்கு கடமை தவறா மனைவி பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டி சுற்றத்துக்கு ஒரு அன்பு உறவு நண்பர்களுக்கு ஒரு நல்ல தோழி இதுவே நான் விட்டு போகும் அடையாளம் பிறக்கும் போதும் எதுவும் கொண்டு வரவில்லை இப்புவியை விட்டு போகும் போதும் ஏதும் கொண்டு செல்வதில்லை நான் வாழும் வாழ்க்கையே என் பிறப்பின் அடையாளம்
"இன்னும் இருந்திருக்கலாம்!" என்றே பிறர் சொல்லும் விதமாய் வாழ்ந்திருப்பின் என் வாழ்வு முழுமை கொண்டது என்றே விளங்கும்; அவ்வண்ணமே வாழ்ந்திருப்பேன்! என்று கூறுகிறீர்கள் இல்லையா பெரியம்மா? நீங்கள் சொல்வது சரியே! நல்ல வரிகள்! -ஸ்ரீ
Harini73 நம் உணர்ச்சிகளை எப்படி வேண்டுமானாலும் வெளிபடுத்தலாம்.தவறில்லை.இதற்கு ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும் ஹரிணி