1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

அடுக்களை மருந்து- சுக்கு

Discussion in 'Posts in Regional Languages' started by periamma, Jan 30, 2017.

  1. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @umasivasankar எனக்கு தெரிந்ததை உங்களிடம் பகிருவேன் .
     
  2. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    சுக்கு, மிளகு போல் மற்றொரு நாட்டு மருந்து வசம்பு.குழந்தை பிறப்பதற்கு முன்னே இந்த மருந்தை வாங்கி வைத்து விடுவார்கள்.
    இளம் குழந்தைகளுக்கு மலச்சிக்கல், பேதி இரண்டுமே அடிக்கடி வரும் கோளாறுகள்.குழந்தையின் ஜீரண பகுதி ஒழுங்காக வேலை செய்தால் தான் குழந்த 20 முதல் 22 மணி நேரம் தூங்கும்.அதுவே வளர்ச்சியின் அடையாளம்.
    வசம்பு என்பது சுமார் இரண்டு அங்குல நீளம் ,அரை அங்குல பருமன் உள்ள வேர்.இது மலச்சிக்கல், பேதி இரண்டு கோளாறுகளுக்கும் பொதுவான மருந்து.
    மலச்சிக்கல்
    ---------------------
    வசம்பை சந்தன கல்லில் உரைத்துத் தாய்ப் பாலுடன் கலந்து ஒரு கால் ஸ்பூன் அல்லது சில சொட்டுகள் கொடுத்தால் மலம் வெளியேறி குழந்தை சகஜமாக சிரிக்க ஆரம்பிக்கும்.
    பேதி
    --------
    வசம்பை காஸ் அடுப்பிலோ அல்லது தணலிலோ சுட்டுக் கரியாக்கி அந்த பொடியை உலர்ந்த சின்ன பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.ஒரு சிமிட்டா பொடியை தேனில் குழைத்து நாக்கில் தடவ மலம் கட்டுப் படும்.தற்போது குழந்தைகளுக்கு மூன்று வயது வரை தேன் தரக கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.எனவே இந்த பொடியையும் தாய்ப் பாலில் குழைத்து நாக்கில் தடவலாம்.

    இதை விட இன்னொரு முக்கிய உபயோகம் ஒன்று உண்டு.
    குழந்தைகளை பற்றித் தாய்மார்கள் கூறும் மற்றொரு complaint ஞாபக மறதி .கஷ்டப் பட்டுக் குழந்தை படிக்கிறான்.நன்றாகப் புரிந்து கொள்கிறான்.ஆனால் நினைவில் நிற்பதில்லை.
    இந்த மறதி நரம்பு சம்பந்தப் பட்ட பிரசினை.concentration ஐ அதிகரிக்க, tension ஜக் குறைக்க ,வேறு diversion ல் மனதை ஈடு படுத்த என்று நிறைய tablets வந்து விட்டன. அவை யாவுமே ஒரு மாதிரி தூக்க நிலையை உண்டு பண்ணுகின்றன.
    பழங்கால ஆயுர்வேத டாக்டர்கள் சொல்லிக் கொடுத்த முறை _ இரண்டு துண்டு வசம்புத் துண்டுகளக் காய்ச்சிய பாலில் ( பசும் பால் நல்லது)சுமார் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு அதை வெளியே எடுத்து நிதான வெய்யில் படும் இடத்தில் காய வைக்க வேண்டும்( பால்கனி மாதிரி இடம்)Next day மறுபடி பசும்பாலில் ஊற வைத்து மீண்டும் காய வைக்க வேண்டும்.இது மாதிரி ஒரு வாரம் பாலில் ஊறிக் காய்த்த வசம்பை நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.தூங்கி எழுந்ததும் ஒரு அரிசி அளவு பொடியைத் தேனில் குழைத்துத் தர வேண்டும்.மூன்று வசம்புத் துண்டுகளின் பொடி இரண்டு மாதத்துக்குப் போதுமானது.ஒரு மூன்று மாதத்திலேயே முன்னேற்றம் தெரியும்.இது ஒன்றும் பிரமாத காரியமல்ல. ஒரு சின்ன டவராவில் மூன்று வசம்புத் துண்டுகளை போட்டு இரண்டு கரண்டி பால் ஊற்றி ஆபீஸ் போகும் முன் எடுத்து வராந்தாவில் வைத்தால் போதும். ஆபீசிலிருந்து வந்து எடுத்து வைக்கலாம்.நம் குழந்தைக்காக இது கூட செய்ய மாட்டோமா என்ன? என் பெண் 11 வயது வரை average student தான்.அசாத்திய புத்திசாலி. அசாத்திய மறதி .நான் இந்த வசம்பு வைத்தியம் ஆரம்பித்து ஆறே மாதத்தில் நல்ல குணம்.12வது ராங்கிலிருந்து 3rd ரேங்க் வந்துவிட்டாள் I continued the treatment for one year .There was no
    looking back .விலை மிகுந்த மாத்திரைகள் சாதிக்க முடியாததை பத்து ரூபாய் வசம்பு சாதித்துக் காட்டியது.என் பெண் மூன்று பாடங்களில் 200/200 வாங்கியதோடு மட்டும் அல்லாமல், degree course ல் எல்லா ஏழு பேப்பர்களில் சென்டம் வாங்கி யூனிவர்சிட்டி 1st ரேங்க் வாங்கினாள் .Thanks to the short piece of வசம்பு.
    ஜெய்சாலா 42
     
    PavithraS and periamma like this.
  3. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .பேச்சு நன்றாக வராத குழந்தைகளுக்கு வசப்பை உரைத்து நாக்கில் தடவுவார்கள்
     
  4. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    இன்னொரு தகவல் .எங்கள் ஊரில் வசம்பு என்று பெயர் சொல்ல மாட்டார்கள் .கடைகளில் பேர் சொல்லாதது என்று கேட்டாலே போதும் புரிந்து கொண்டு கொடுப்பார்கள்
     
    PavithraS likes this.
  5. jayasala42

    jayasala42 IL Hall of Fame

    Messages:
    5,367
    Likes Received:
    10,570
    Trophy Points:
    438
    Gender:
    Female
    vasambu is also known as 'pillai valarppaan.' in Tiruchy.I think it is known as 'per sollaathathu' in Chennai and thirunelveli.
    Jayasala 42
     
    periamma likes this.
  6. Padhmu

    Padhmu IL Hall of Fame

    Messages:
    9,920
    Likes Received:
    1,887
    Trophy Points:
    340
    Gender:
    Female
    useful information about chuku.
     
  7. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    @Padhmu Thanks Usha
     

Share This Page