அறியாதவராய் அறிமுகமாகி பரஸ்பரம் நட்பைப் பரிமாறி நட்பென்பது அன்பாய் மாறி அறிந்தோம் நம்மை நாம் என் சொல்வேன் உன்னை நான்?? மாதங்களில் மார்கழி ஆனாய்.. சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்றாய் அன்பு கொண்டே என்னை வென்றாய்.. புதியவர் என்றும், பழையவர் என்றும் காட்டவில்லை நீ ஈடுபாடு... அதுதான் உன்னை மற்றவரிடம் இருந்து தனித்து காட்டிய ஒரு வேறுபாடு ஆற்றல் பல உண்டு உன்னிடம், அதை செய்யும் வலுவும் உண்டு உன்னிடம், செய்யும் குணம்(பொறுமை) இல்லையா?? இல்லை மனம்தான் இல்லையா?? தடை தகர்த்து, உன் பயணம் நகரத்து... வெற்றி நீ தொட்டு விடும் தூரம்தான் *********************************************************** அஞ்சலி எனும் செல்லப் பெயர் கொண்டவள் (கல்லூரித் தோழிகளுக்கு...) என் தமக்கை அவள், தங்கத் தாரகையாய் இங்கே வலம் வரும் லதா ராம் தான் இந்த வரிகளுக்கு உரியவர்
நேரம் இன்றி கொடுக்கிறேன் இந்த சிறு வரி! கண்டவுடன் உள்ளம் தைக்கும் முல்லையே நம்பிக்கையை நீ உணர்ந்தால் நாளும் உயர்வு உன்னுடன். கவலை கொண்டு கலங்குவதை விட உறுதி கொண்டு தெளிவது மேல். வானத்தை பாரடி தோழி பூமிக்கு குடை பிடிக்கிறது பார் தலைக்கு மேலே அதன்கீழ் எனக்காய் நானொருமுறை - உனக்காய் நீ ஒருமுறை வாழ்ந்து பார்ப்போமே வா அஞ்சிடாமல் அஞ்சலி நீ அகிலமெங்கும் சென்று உன் கொடி நாட்டு! திரும்பி வா- உன் தெருவெங்கும் ஆனந்த கூத்தாடு! மீண்டும் மீண்டு வந்து இங்கே தாண்டும் உயரம் காண ஆவலாய் உள்ளோம்!!!!
ஆம் வேணி. சற்று நாட்களாக அவர் இங்கு வருவதில்லை போலும். ஏதேனும் முக்கியமான அலுவல் காரணமாக இருக்கலாம் என நினைத்தேன். உங்கள் அழகு வரிகளுக்காக அவர் வந்து விட்டால் மகிழ்ச்சி தான். -ஸ்ரீ
வேணி அக்கா, லதா அக்காவிற்கான உங்களது வரிகள் நன்று. லதா அக்கா, தடைகள் பல வரும் அனைத்தையும் நம்பிக்கை கொண்டு வெல்லுங்கள். நண்பர்களாய், சகோதரிகளாய் எங்கள் துணை உங்களுக்கு உண்டு :thumbsup அட அஞ்சலியா உங்க பெட்-நேம்
அன்பான அஞ்சலியே! உன் அழகு தோழி! படைத்து விட்டால் அருமை கவிதை எங்கள் வாழ்த்து உனக்கு இருக்கையில் எல்லா தடைகளும் விலகி ஓடும்
உனக்கொரு நன்றி கூற துடிக்குது என் உள்ளம் - ஆனால் நன்றி கூறி உன்னை விலக்கி வைக்க விரும்பவில்லையடி - மாறாக il என்னும் விளக்கில் அன்பு என்னும் நெய் கொண்டு நம் நட்பு என்னும் தீபம் சுடர் விடவே விழைகிறேன்