வேகமாய் ஓடும் ரயிலில் இருந்து எட்டி பார்க்கிறேன் தூரத்தில் தெரிந்தன ஒன்றிரண்டு வீடுகள் சுற்றிலும் பச்சை பசுமையாய் வயல் வெளி எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன் 'ஆட்களே இல்லாத இந்த அழகான ஊர் ஆனால் எவ்வளவு நாட்களுக்கு? இப்படி அக்கம் பக்கம் ஏதும் இல்லாமல் எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ? என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ? சலித்து விடாதோ அவர்களுக்கு?' **** எங்கள் கிராமத்து வீட்டினுள் தலை வைத்து படுத்திருக்கிறேன் தண்டவாளத்தில் ரயில் வரும் அரவம் கேட்டது எழுந்து நின்று வேடிக்கை பார்க்கிறேன் எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன் 'வேகமாய் ஓடும் இந்த ரயிலுக்குள் எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ? என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ? அப்படி எங்கே தான் போய்/வருகிறார்களோ? சலித்து விடாதோ அவர்களுக்கு?'
அழகான கவிதை. வலுவான கருத்து. நாம் செய்வது தான் சிறந்தது மற்றவர்கள் மடத்தனமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்ற சராசரி மனிதனின் எண்ணத்துக்கு மரண அடி கொடுத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வரலொட்டி ரெங்கசாமி ஸ்ரீதர்
whoa... the great varalotti has posted a comment in my blog.. am pinching myself to see if it is for real!! thanks a lot Sridhar sir, am honoured. Yes, will try writing more, god willing.