தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. -----எங்கேயோக் கேட்டக் குறள் 436 ஏதிலார்க் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. ----- எப்போதோக் கேட்டத் தகப்பன் குரல்,குறள் 190 மாயோன் -தமிழ்க் கவிதைப் பகுதிக்கு வரவேற்கிறேன்! உமதே மனம், உமதே குரலாயினும் -இணையச் சமவெளியில் பதிந்தமையால், உமதிருவரித் தூண்டுதலால் இப்போதெனக்குத் தோன்றியதைப் பதிகிறேன்,பொறுப்பீராக! அத்துமீறும் தவறென்றேல்,மன்னிப்பீருமாக! நன்றி நறுக்கென நவின்றீ ராயினும் செருக்கினால் மறந்தாரை மன்னித்தல் மேல். இடமறந்து மானுடமறந்து தாம் வந்தத் தடமறந்துத் தானழிவார்த் தாமே. செருக்கிருப்பாரிடம் புகார் சிறப்புளார் மற்றோர் நெருப்பிடை விட்டிலாவர்க் காண். செருக்கிலார்ப் பிறர்க் குற்றம் பொறுப்பார்த் தரிக்கிலாராகித் துன்புறுதல் இல். புலம்புதலால் ஆய பயனென் கொள் நலமின்றேல் விலகல் மேல்.
உங்கள் பதிலுக்கு நன்றி மற்றும் சொல் ஆற்றலுக்கு என் மரியாதை. என் வரிகள் சிறார் எடுக்கும் சிறு படிகள். பிழைகளுக்கு வருந்துகிறேன்.
எமது குரல் 2 தேக்கினார் தேய்ந்தார் இற்றார் குற்றம் மாய விமிசம் முற்றும் தேக்கினார் – வஞ்சம், வெறுப்பு, கோபம் …