ஆர்ப்பரிக்கும் கடல் அலை கரையை தொட்டதும் அடங்கி விடும் உள்ளுக்குள்ளே குமுறும் எரிமலை பொங்கி வடிந்ததும் சாம்பலாகி விடும் உணர்வு குவியலை மனதில் தேக்கி வைத்து மனச்சுமையை அதிகமாக்கி வலியால் துடிக்கும் மனிதனே சுமையை வெளியே வீசி விடு உன் மனமும் பளுவின்றி பாங்காய் ஒளி வீசும் உணர்ச்சிகளை அடக்கினால் உருவாகும் துயரம் அள்ளி வீசி விட்டால் கிட்டிவிடும் ஆனந்தம்