If SPB pays ARR then what is the big deal in paying IR? May be it could have been done without bringing to the media....
Haha Ranchu, GA thalakeelai ninnaalum, IR 10 paisa kudukka maatar! GA may just well continue doing his "Judge" business in kids singing shows than doing vetti polambuls like these!
Even if GA has a different opinion he need not say that in public.. it shows how greedy he is.. without IR, GA has no identity..
ஒரு மினிமம் பட்ஜெட் பேய் படம் மூலம் தமிழில் அறிமுகமான அந்த நடிகை எல்லா ஹீரோக்களுக்கும் டார்லிங்காக வலம் வருகிறாராம். அறிமுக ஹீரோக்கள், பாப்புலர் ஆகாத ஹீரோக்கள் என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும் ஹீரோயின்கள் மத்தியில் இந்த ஹீரோயின் மட்டும் வித்தியாசமானவராக இருக்கிறாராம்.வளர்ந்து வரும் ஹீரோக்களாக இருந்தாலும் சரி, பெரிய ஹீரோக்களாக இருந்தாலும் சரி ஒரே மாதிரியாக பழகி சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம். இதனால் வளரும் நாயகர்களின் ரெகமெண்டேஷன் தாராளமாகக் கிடைக்கிறது. புது ஃபார்முலா நன்றாக கை கொடுக்கிறதாம். ஹீரோயின் கையில் இப்போது நான்கைந்து படங்கள்.
அட... தொட்டதெல்லாம் துலங்குதே என்ற நினைப்பில் ஹீரோ கேரியரைத் தொடங்கிய இசை வாரிசு நடிகருக்கு வரிசையாக அடிகள் விழுகின்றன. போன வாரம் வந்த படத்தை எல்லோரும் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள். ட்விட்டரில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகர் இதை எதிர்பார்த்து தான் படம் பற்றி எந்த ட்விட்டும் போடவில்லை.ஆனாலும் நடிகரை நோக்கி படையெடுக்கிறது தமிழ் சினிமா. ஹீரோ பஞ்சம்தான் காரணம். நடிகர் அடுத்தடுத்து பாலா, வெற்றிமாறன் படங்களில் நடிக்கவிருப்பதால் இன்னும் மவுசு குறையாமல் இருக்கிறார். இப்போது தன்னை அணுகும் ஆட்களிடம் கால்ஷீட் ரெண்டு வருஷம் கழிச்சு... சம்பளம் 15 கோடி... என்று சொல்கிறாராம். 15 ஆ? என்று அலறும் நபர்களிடம் ரெண்டு வருஷம் கழிச்சு என் சம்பளம் 20 ஐத் தொடும்... எப்படி வசதி? என்று கேட்கிறாராம். அட.. ஒரு மனசாட்சி வேண்டாம்?
நல்லி எலும்பை கடிப்பதில் பெயர் பெற்ற நடிகர் இப்போது ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்துக்கு சம்பளம் குறைத்துக்கொண்டார். ஆனால் குணச்சித்திர வேடங்களுக்காக வரும் ஆட்களைத்தான் அலற விடுகிறாராம். தமிழ் சினிமாவில் இப்போது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு பஞ்சம் நிலவுகிறது. ஹீரோவாக நடித்தபோதே தயாரிப்பாளர்களை அலற விட்ட நல்லி எலும்பு நடிகர் இப்போதும் அதே ரேஞ்சில் மூன்று விரல்களை காட்டுகிறாராம். இவருக்கு வர வேண்டிய வாய்ப்புகள் இப்போது முன்னாள் காமெடியனுக்கு போய்க் கொண்டிருக்கின்றன. இதேபோல் இயக்கத்தில் இருந்து நடிப்புக்கு வந்திருக்கும் இமயமும் இரண்டு விரல்களைக் காட்டுகிறாராம். பாடகர் மகனுடன் இணைந்து நடித்திருக்கும் படத்தில் ஹீரோவை விட இவருக்கு சம்பளம் அதிகமாம்.
கபடி இயக்குநர் தனது முதல் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் முதல் பாகத்தில் நடித்த காமெடியனோடு இன்னொரு காமெடியனையும் சேர்க்க, அது பெரிய பஞ்சாயத்தாகி இருக்கிறது. கபடி படத்தில்தான் பரோட்டாவால் பாப்புலர் ஆனார் அந்த காமெடியன். சமீப காலமாக பரோட்டாவின் காமெடி ரொம்பவே டல்லடிக்கிறது. இதனை உணர்ந்த இயக்குநர் இரண்டாம் பாகத்தில் பரோட்டாவை சின்ன கேர்க்டர் ஆக்கிவிட்டு இன்னொரு காமெடியனாக போதை காமெடியை சேர்த்துவிட்டாராம்.ஏற்கனவே முந்தைய மாவீரன் படத்தில் பரோட்டா கேர்க்டரை ரொம்பவே டம்மி பண்ணியிருந்தார் இயக்குநர். இவை எல்லாம் சேர்ந்துகொள்ள இனி இவர் படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவெடுத்து விட்டாராம். இயக்குநரே போதைக் காமெடி மட்டும் எங்களை சிரிக்க வைத்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாரா என்ன?
காக்கா முட்டை நடிகையின் தவத்துக்கு இப்போது தான் வரம் கிடைத்திருக்கிறது. நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்த பிறகும் கூட நடிகையால் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்துகொண்டே இருந்தது. இருந்தாலும் வாய்ப்பு வரட்டுமே என்று காத்திருந்தார். காத்திருப்புக்கு பலனாக மதுபான நடிரை ஸ்டைலிஷ் இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இந்த ரோலுக்காக நடிகையை அணுகிய இயக்குநர் 'சம்பளம் எவ்வளவு வேண்டும்' என்று கேட்க உங்க படத்துல நடிக்க எதுக்கு சார் சம்பளம்? என்று கேட்டு சம்பளமே வேண்டாம் என்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். அப்ப ரோல் இன்னும் வெயிட் ஆகும்னு சொல்லுங்க!