1.சனி, ஞாயிறு தான் மெகாசீரியல் கிடையாதே....அப்புறம் ஏன் உன் மாமியார் டி.வி முன்னால் உக்காந்துஅழுதுக்கிட்டிருக்காங்க....? டச் விட்டுபோகாம இருக்கத்தான்!! 2.அடுத்த பூமி அதிர்ச்சி எப்ப வரும்னு ஒரு அம்மா போன்ல கேட்கிறாங்க சார் ......? எதுக்காம்...... அவங்க மாமியார் கீழே விழாம தப்பிச்சிட்டாங்களாம்......!! 3.அடுத்த வீட்டு அமலா ரொம்ப மோசம்.....? ஏன்டி.....?? நேத்துவரைக்கும் காபிப்பொடியும்,சக்கரையும் தான் கடனாக்கேட்டுக்கிட்டுஇருந்தா......ஆனா...இன்னிக்குக் காபியே கடனாக்கேக்குறா....! 4.ஒரு நல்ல விஷயத்தை சொன்னா,எல்லா பேஷண்ட்டுகளும்,அழ ஆரம்பிச்சிட்டாங்க...... அப்படி என்ன சொன்னே.....? நர்சுக்கு கல்யாணம் நடக்கப்போகுதுன்னு சொன்னேன்.....