சற்றும் குறையாத கனிவும் கைப் பற்றிய நாளின் குழைவும் சிறு ஒற்றைக் கல் நாசி நகையும் கற்றைக் குழல் சூடு மலரும் நெற்றி நிறைக்கின்ற பொட்டும் காணத் தொற்றிக் கொளும் இன்பம் மறைய வற்றிக் காய்ந்தனவென் கண்கள் பாதம் ஒற்றிக் குழந்தைகள் அழவும் நடு முற்றம் நீ கிடக்கும் நிலையும் வெற்றிச் சிரிப்பொன்றுன் இதழில் காணப் பெற்றேன் தனியன் இனி நானே ! Regards, Pavithra
முற்றத்தில் காணப்பட்ட என் தாயின் உருவம் நினைவுக்கு வந்தது .தந்தையின் தனிமை எனை வருத்தப்படுத்தியது .மிக கொடிய நாட்கள் .மனதை தாக்கியது உங்கள் கவிதை
@vaidehi71 , @GoogleGlass , @periamma , @Poetlatha , @jskls , @knbg ---------- விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி , தோழமைகளே ! உங்கள் வருத்தம் எனக்குப் புரிகின்றது. நிழலின் அருமை வெயிலில். உங்கள் பாராட்டுக்கு நன்றி ! பெரியம்மா, இணைப்பறவைகளில் ஒன்று மற்றொன்றைத் தனியாய்த் தவிக்க விட்டுப் போகும் சோகம் என்னவென்று என் பெற்றோர் மூலம் மிகச் சிறுவயதில் நானும் உணர்ந்தேன். உங்கள் உணர்வு எனக்குப் புரிகின்றது. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ! தமிழுக்குத் தன்னிகரில்லாமல் இருக்கலாம். அதை என் தமிழ் என்று நீங்கள் சொல்வது உங்கள் இரசிகத் தன்மையின் வண்மை . அத்தகு பெரும் வார்த்தைக்கு நான் சிறிதும் தகுதியற்றவள் , நண்பரே ! பின்னூட்டத்திற்கு நன்றி !
@kaniths , Thanks for the like. Hope you took some pictures on photography day. Care to share ? Would love to enjoy some poetic visuals from you.