இனிய வாசகர்களே ! அனைவருக்கும் என் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! கலைந்தது இயற்கையின் குளிர்கால நித்திரை ! மலர்ந்தது பூக்களால் இளவேனிற் சித்திரை ! துன்பங்கள் தீர்க்கட்டும் பிறந்த புத்தாண்டு ! இன்பங்கள் சேர்க்கட்டும் சிறந்த இவ்வாண்டு ! துவர்ப்பும் கசப்பும் புளிப்பும் இனிப்பும் உவர்ப்பும் கார்ப்பும் சேர்ந்ததே வாழ்க்கை ! இதையே எளிதாய் விளக்கும் வகையில் அதையே உணவில் சேர்த்துக் கொள்வோம் ! வேம்பின் கசப்பும் மருந்தே ஆகும் ! கரும்பின் இனிப்போ இன்பம் நல்கும் ! மாங்காய்ப் புளிப்பும் உப்பின் உவர்ப்பும் , பாங்காய்ச் சேர்க்கும் கார்ப்பும் துவர்ப்பும், பசியைத் தூண்டிச் செரிக்கவும் செய்யும் ! ருசிக்கவும் ரசிக்கவும் நம்மை இழுக்கும் ! உணவில் கூட உயர்ந்த கொள்கைகள் உணர்வில் இருக்கும் அன்பைப் போலவே ! இவ்வறிவை தந்தவள் தாய்த் தமிழ்ச்செண்டு ! செவ்வையாய் செய்யனும் அவளுக்குத் தொண்டு ! வேறொரு தேசத்தில் இன்று இருந்தாலும் வேர் அறுகாமல் பார்த்துக் கொள்ளுவோம் ! கன்னித் தமிழின் அன்புப் பிள்ளைகள் , அன்னை அவளின் பெருமை காப்போம் ! யாதும் ஊராய் யாவருங் கேளிராய் தீதற்ற வழியில் வாழ்க்கையில் உயர்வோம் ! கோதற்றத் தமிழுக்கு நாம் தொண்டாற்றுவோம் ! இதைப் புத்தாண்டின் கொள்கையாய்க் கொள்வோம் ! Regards, Pavithra