காகிதத்தில் அச்சடிக்கும் காதலா ? இல்லவேயில்லை கல்லில் பதிக்கும் காவியக் காதல் ! கதைகளில் காணக்கிடைக்காத, காதலன் நான் ! தற்பெருமை கொண்டேன், தேவதை நீ எனக்குதானென்று ! கண்களில் காதல் பேசிய நீ, கனவில் கதை பேசுகிறாய் இன்று ! நேரில் நிமிர்ந்து பேசிய நீ, காற்றில் கசிந்து செல்கிறாய் இன்று ! விதியால் இணைந்த நாம் ! வீதியில் உன் உயிர் பிரிந்ததே, என் சொல்வேன் நான், கவனம் இல்லையே அன்று, கண்மணி நீ என்னுடன் இருந்த பொழுது ! காதல் வானில் சிறகடித்த என் மனம், கவிதையாய் வடிக்கிறது உன் நினைவுகளைக் கொண்டு !